Skip to main content

Posts

Showing posts from August, 2020

காக்கும் கரங்கள் உண்டெனக்கு

காக்கும் கரங்கள் உண்டெனக்கு காத்திடுவார் கிருபையாலே அல்லேலூயா பாடிப்பாடி அலைகளை நான் தாண்டிடுவேன் நம்பி வா இயேசுவை! நம்பி வா இயேசுவை! 2. நிந்தனைகள் போராட்டம் வந்தும் நீதியின் தேவன் தாங்கினாரே நேசக்கொடி என் மேல் பறக்க நேசர் உமக்காய் ஜீவித்திடுவேன் 3. கன்மலைகள் பெயர்க்கும் படியாய்க் கர்த்தர் என்னைக் கரம் பிடித்தார் காத்திருந்து பெலன் அடைந்து கழுகு போல எழும்பிடுவேன் 4. அத்திமரம் துளிர்விடாமல் ஆட்டுமந்தை முதல் அற்றாலும் கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை நம்புவேன் இயேசுவை! நம்புவேன் இயேசுவை!

மகனே உன் நெஞ்செனக்குத்

மகனே உன் நெஞ்செனக்குத் தாராயோ? – மோட்ச வாழ்வைத் தருவேன், இது பாராயோ? சரணங்கள் 1. அகத்தின் அசுத்தமெல்லாம் துடைப்பேனே - பாவ அழுக்கை நீக்கி அருள் கொடுப்பேனே --- மகனே 2. உன் பாவம் முற்றும் பரி கரிப்பேனே – அதை உண்மையாய் அகற்ற யான் மரித்தேனே --- மகனே 3. பாவம் அனைத்துமே விட்டோடாயோ? – நித்ய பரகதி வாழ்வை இன்றே தேடாயோ? --- மகனே 4. உலக வாழ்வினை விட்டகல்வாயே - மகா உவப்பாய்க் கதி ஈவேன் மகிழ்வாயே --- மகனே 5. உன்றன் ஆத்துமத்தை நீ படைப்பாயே – அதில் உன்னதன் வசிக்க இடம் கொடுப்பாயே --- மகனே

எந்த நிலையில் நானிருந்தாலும் - 938

எந்த நிலையில் நானிருந்தாலும் என்னை வெறுக்காதவர் என் இயேசு ஒருவரே என் தேவன் ஒருவரே நோயாளியாய் நானிருந்தால் பலர் வெறுப்பார்கள் என் நோய்களையே சொல்லி சொல்லி நோகடிப்பார்கள் கடனாளியாய் நானிருந்தால் பலர் வெறுப்பார்கள் என் கடன்களையே சொல்லி சொல்லி கலங்க வைப்பார்கள் பட்டம் படிப்பு இல்லாவிட்டால் பலர் வெறுப்பார்கள் வெறும் பட்ட மரம் என்று சொல்லி பரிகசிப்பார்கள் அனாதையாய் நானிருந்தால் பலர் வெறுப்பார்கள் அன்பு வேண்டுமா என்று சொல்லி அலைய வைப்பார்கள்

ஒரு தாய் தேற்றுவதுபோல் - 431

ஒரு தாய் தேற்றுவதுபோல் ஒரு தாய் தேற்றுவது போல் என் நேசர் தேற்றுவார் – அல்லேலூயா (4) 1. மார்போடு அணைப்பாரே மனக்கவலை தீர்ப்பாரே 2. கரம்பிடித்து நடத்துவார் கன்மலை மேல் நிறுத்துவார் 3. எனக்காக மரித்தாரே என் பாவம் சுமந்தாரே 4. ஒரு போதும் கைவிடார் ஒரு நாளும் விலகிடார்