மகனே உன் நெஞ்செனக்குத் தாராயோ? – மோட்ச
வாழ்வைத் தருவேன், இது பாராயோ?
சரணங்கள்
1. அகத்தின் அசுத்தமெல்லாம் துடைப்பேனே - பாவ
அழுக்கை நீக்கி அருள் கொடுப்பேனே --- மகனே
2. உன் பாவம் முற்றும் பரி கரிப்பேனே – அதை
உண்மையாய் அகற்ற யான் மரித்தேனே --- மகனே
3. பாவம் அனைத்துமே விட்டோடாயோ? – நித்ய
பரகதி வாழ்வை இன்றே தேடாயோ? --- மகனே
4. உலக வாழ்வினை விட்டகல்வாயே - மகா
உவப்பாய்க் கதி ஈவேன் மகிழ்வாயே --- மகனே
5. உன்றன் ஆத்துமத்தை நீ படைப்பாயே – அதில்
உன்னதன் வசிக்க இடம் கொடுப்பாயே --- மகனே
Comments
Post a Comment