Skip to main content

மகனே உன் நெஞ்செனக்குத்

மகனே உன் நெஞ்செனக்குத் தாராயோ? – மோட்ச
வாழ்வைத் தருவேன், இது பாராயோ?

சரணங்கள்

1. அகத்தின் அசுத்தமெல்லாம் துடைப்பேனே - பாவ
அழுக்கை நீக்கி அருள் கொடுப்பேனே --- மகனே

2. உன் பாவம் முற்றும் பரி கரிப்பேனே – அதை
உண்மையாய் அகற்ற யான் மரித்தேனே --- மகனே

3. பாவம் அனைத்துமே விட்டோடாயோ? – நித்ய
பரகதி வாழ்வை இன்றே தேடாயோ? --- மகனே

4. உலக வாழ்வினை விட்டகல்வாயே - மகா
உவப்பாய்க் கதி ஈவேன் மகிழ்வாயே --- மகனே

5. உன்றன் ஆத்துமத்தை நீ படைப்பாயே – அதில்
உன்னதன் வசிக்க இடம் கொடுப்பாயே --- மகனே

Comments

Popular posts from this blog

விசுவாசியே நீ பதறாதே - 234

கர்த்தரின் கை குறுகவில்லை 1. கர்த்தரின் கை குறுகவில்லை கர்த்தரின் வாக்கு மாறிடாதே சுத்தர்களாய் மாறிடவே சுதன் அருள் புரிந்தனரே பல்லவி விசுவாசியே நீ பதறாதே விசுவாசியே நீ கலங்காதே விசுவாசத்தால் நீதிமான் இன்றும் என்றும் பிழைப்பான் 2. திருச்சபையே நீ கிரியை செய்வாய் திவ்விய அன்பில் பெருகிடுவாய் தலைமுறையாய் தலைமுறையாய் தழைத்திட அருள் புரிவாய் --- விசுவாசியே 3. நெஞ்சமே நீ அஞ்சிடாதே தஞ்சம் இயேசு உன் அரணே தம் ஜனத்தை சீக்கிரமாய் தம்முடன் சேர்த்துக் கொள்வார் --- விசுவாசியே 4. மேகம் போன்ற வாக்குத்தத்தம் சூழ நின்றே காத்திருக்க விசுவாசத்தால் உரிமை கொள்வாய் விரைந்து முன் ஏகிடுவாய் --- விசுவாசியே

அனைத்து சமயத்து மெய்ப்பொருள்

அனைத்து சமயத்து மெய்ப்பொருள் இயேசுவே வேதங்கள் கூறிடும் கருப்பொருள் இயேசுவே மெய்ப்பொருள் இயேசுவே... உண்மை என்பது ஒன்றே ஒன்றாகும் அண்மையில் சேர்ந்திட்டால் அதுவும...

உம்மைப் போல் யாருண்டு - 361

உம்மைப் போல் யாருண்டு எந்தன் இயேசு நாதா இந்தப் பார்தலத்தில் உம்மைப் போல் யாருண்டு பாவப்பிடியினில் சிக்கி நான் உழன்றேன் தேவா தம் அன்பினால் மன்னித்தீர் --- உம்மைப் 1. ...