Skip to main content

Posts

Showing posts from October, 2019

திக்கற்ற பிள்ளைகளுக்கு - 780

திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ தனிமையான எனக்கு சகாயர் நீரே அல்லவோ ஆதரவற்ற எனக்கு பக்க பலம் நீரே அல்லவோ என்றைக்கும் மறைந்திருப்பீரோ தூரத்தில் நின்று விடுவீரோ பேதைகளை மறப்பீரோ இயேசுவே மனமிரங்கும் கர்த்தாவே எழுந்தருளும் கை தூக்கி என்னை நிறுத்தும் தீமைகள் என்னை சூழும் நேரம் தூயவரே இரட்சியும் தாய் என்னை மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை ஏழையின் ஜெபம் கேளும் இயேசுவே மனமிரங்கும்

ஆராதிக்க கூடினோம் - 84

ஆராதிக்க கூடினோம் ஆர்ப்பரித்து பாடிடுவோம் வல்ல இயேசு நல் தேவன் என்றென்றும் அவர் நம் தேவன் 1.தேவ வாசஸ்தலம் என்றும் இன்பமானதே மகிமை தேவன் கிறிஸ்து இயேசு பிரசன்னம் இங்கே மகிமை மகிமையே! என் மனம் பாடுதே மக்கள் மத்தியில் என் மகிழ்ச்சி பொங்குதே! 2.சீயோன் பெலனே! வெற்றி சிகரமே! சேனைகளின் கர்த்தர் இயேசு கிரியை செய்கிறார் ஜீவன் பெலனும் ஆசீர்வாதமே நித்திய ஜீவன் இன்றும் என்னில் ஓங்கி நிற்குதே! 3. கர்த்தர் சமூகம் என் வாழ்வின் மேன்மையே கர்த்தர் இயேசு ராஜன் என்றும் உயர்ந்து நிற்கிறார் அல்லேலூயா என் ஆவி பாடுதே ஆராதனை அழகு என்னை கவர்ந்து கொண்டதே! 4.தேவ சாயல் சபையில் தோன்றுதே தேவர் நடுவில் இயேசு நியாயம் செய்கிறார் தேவ சேவையே என் கெம்பீர சேவை தேவாவியில் நிறைந்து ஆடிப்பாடுவேன்

விடுதலை நாயகன் வெற்றியைத் - 101

விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார் எனக்குள்ளே இருக்கிறார் என்னே ஆனந்தம் 1. நான் பாடிப்பாடி மகிழ்வேன் – தினம் ஆடி ஆடித்துதிப்பேன் – எங்கும் ஓடி ஓடி சொல்லுவேன் என் இயேசு ஜீவிக்கிறார் 2. அவர் தேடி ஓடி வந்தார் என்னைத் தேற்றி அணைத்துக் கொண்டார் என் பாவம் அனைத்தும் மன்னித்தார் புது மனிதனாக மாற்றினார் 3. அவர் அன்பின் அபிஷேகத்தால் என்னை நிரப்பி நடத்துகின்றார் சாத்தானின் வல்லமை வெல்ல அதிகாரம் எனக்குத் தந்தார் 4. செங்கடலைக் கடந்து செல்வேன் யோர்தானை மிதித்து நடப்பேன் எரிகோவை சுற்றி வருவேன் எக்காளம் ஊதி ஜெயிப்பேன்

சிலுவையில் நிழலில் - 381

சிலுவையில் நிழலில் அனுதினம் அடியான் சாய்ந்திளைப் பாரிடுவேன் - ஆ ஆ சிலுவையின் அன்பின் மறைவில் கிருபையின் இனிய நிழலில் ஆத்தும நேசரின் அருகில் அடைகிறேன் ஆறுதல் மனத...

உந்தன் நாமம் மகிமை பெற - 227

உந்தன் நாமம் மகிமை பெற வேண்டும் கர்த்தாவே உந்தன் அரசு விரைவில் வரவேண்டும் கர்த்தாவே – ஜெபிக்கிறோம் நாங்கள் துதிக்கிறோம் 1. இந்தியா இரட்சகரை அறிய வேண்டுமே இருளில் ...

உம்மைப் போல் யாருண்டு - 361

உம்மைப் போல் யாருண்டு எந்தன் இயேசு நாதா இந்தப் பார்தலத்தில் உம்மைப் போல் யாருண்டு பாவப்பிடியினில் சிக்கி நான் உழன்றேன் தேவா தம் அன்பினால் மன்னித்தீர் --- உம்மைப் 1. ...

தொழுகிறோம் எங்கள் பிதாவே - 354

தொழுகிறோம் எங்கள் பிதாவே பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே அனுபல்லவி பரிசுத்த அலங்காரத்துடனே தரிசிப்பதினால் சரணம் சரணம் சரணங்கள் 1. வெண்மையும் சிவப்புமானவர் உண்மையே உருவாய்க் கொண்டவர் என்னையே மீட்டுக் கொண்டவர் அன்னையே இதோ சரணம் சரணம் --- தொழுகிறோம் 2. தலை தங்க மயமானவர் தலை மயிர் சுருள் சுருளானவர் பதினாயிரம் பேரில் சிறந்தவர் பதினாயிரமாம் சரணம் சரணம் --- தொழுகிறோம் 3. கண்கள் புறாக்கண்கள் போல கன்னங்கள் பாத்திகள் போல சின்னங்கள் சிறந்ததாலே எண்ணில்லாத சரணம் சரணம் --- தொழுகிறோம் 4. கரங்கள் பொன் வளையல்கள் போல நிறங்களும் தந்தத்தைப் போல கால்களும் கல் தூண்கள் போல காண்பதாலே சரணம் சரணம் --- தொழுகிறோம் 5. சமஸ்த சபையின் சிரசே நமஸ்காரம் எங்கள் அரசே பிரதானம் எம் மூலைக்கல்லே ஏராளமாய் சரணம் சரணம் --- தொழுகிறோம் 6. அடியார்களின் அஸ்திபாரம் அறிவுக்கெட்டாத விஸ்தாரம் கூடி வந்த எம் அலங்காரம் கோடா கோடியாம் சரணம் சரணம் --- தொழுகிறோம் 7. பார்த்திபனே கன தோத்திரம் கீர்த்தனம் மங்களம் நித்தியம் வாழ்க வாழ்க வாழ்க என்றும் அல்லேலூயா ஆமென் ஆமென் --- தொழுகிறோம்

பரம அழைப்பின் பந்தய - 894

பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய் நான் இலக்கை நோக்கி ஓடுகிறேன் ஓடுகிறேன் நான் ஓடுகிறேன் இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன் அல்லேலுயா அல்லேலுயா -4 1. இலாபமான அனைத்தையும...

துதி எடுத்தால் சாத்தான் - 878

துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான் முறுமுறுத்தால் திரும்பி வருவான்                          பல்லவி துதித்துப்பாடி மதிலை இடிப்போம் மகிழ்ந்து பாடி எரிகோ பிடிப்போம் ...

போற்றி துதிப்போம் எம் - 195

போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே புதிய இதயமுடனே நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை நான் என்றும் பாடித்துதிப்போம் – (2) இயேசு என்னும் நாமமே என் ஆத்துமாவின் கீதமே-எ...

குயவனே குயவனே படைப்பின் - 200

குயவனே குயவனே படைப்பின் காரணனே களிமண்ணான என்னையுமே கண்ணோக்கிப் பார்த்திடுமே 1. வெறுமையான பாத்திரம் நான் வெறுத்து தள்ளாமலே நிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்க செ...

அல்லேலூயா துதி மகிமை - என்றும்

அல்லேலூயா துதி மகிமை - என்றும் இயேசுவுக்கு செலுத்திடுவோம் ஆ அல்லேலூயா அல்லேலூயா சிலுவையை சுமப்பாயா உலகத்தை வெறுப்பாயா உலகத்தை வெறுத்து இயேசுவின் பின்னே ஓடியே வருவாயா மோட்சத்தை அடைந்திடவே பாடுகள் படவேண்டும் பாடுகள் மத்தியில் பரமன் இயேசுவில் நிலைத்தே நிற்க வேண்டும் ஜெபத்திலே தரித்திருந்து அவர் சித்தம் நிறைவேற்று முடிவு பரியந்தம் அவரில் நிலை நிற்க பெலனைப் பெற்றுக்கொள்ளு சென்றவர் வந்திடுவார் அழைத்தே சென்றிடுவார் அவருடன் செல்ல ஆயத்தமாவோம் அவருடன் வாழ்ந்திடவே கண்ணீர் துடைத்திடுவார் கவலைகள் போக்கிடுவார் கரங்களை நீட்டியே கருணையோடு கர்த்தரே காத்திடுவார்

நானும் என் வீட்டாருமோவென்றால்

நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் நீயும் சேவிப்பாயா – நீயும் சேவிப்பாயா? 1. கர்த்தரையே சேவிப்பது ஆகாத தென்று கண்டால் யாரை நீ சேவிப்பாய் யென்பதை ...

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து - 667

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து பல்லவி சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து இவர் தாம், இவர் தாம், இவர் தாம் சரணங்கள் 1. நாம தாதி பிதாவின் திருப் பாலர் இவர், அனுகூலர் இவர், மனுவேலர் இவர் --- சமாதானம் 2. நேய கிருபையின் ஒரு சேயர் இவர், பரம ராயர் இவர், நாம தாயர் இவர் --- சமாதானம் 3. ஆதி நரர் செய்த தீதறவே, அருளானந்தமாய், அடியார் சொந்தமாய் --- சமாதானம் 4. ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே, அறிஞோர் தேடவே, ஆயரும் கூடவே --- சமாதானம் 5. மெய்யாகவே மே சியாவுமே, நம்மை நாடினாரே, கிருபை கூறினாரே --- சமாதானம் 6. அருளானந்த மோட்ச வழி காட்டினாரே, நிலை நாட்டினாரே, முடி சூட்டினாரே --- சமாதானம்

ஓ மனிதனே நீ எங்கே - 627

ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய் பல்லவி ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்? காலையில் மலர்ந்து மாலையில் மறையும் மலராய் வாழ்கின்றாய் சரணங்கள் 1. மண்ணில் பிறந்த மானிடனே மண்ணுக்கே நீ திரும்புவாய் மரணம் உன்னை நெருங்கும் போது எங்கே நீ ஓடுவாய் மரணத்தின் பின்னே நடப்பது என்ன என்பதை நீ அறிவாயோ --- ஓ 2. பாவியாய் பிறந்த மானிடனே பாவியாய் நீ மரிக்கின்றாய் இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக்கொண்டால் நீ இன்றே மரணத்தை வென்றிடுவாய் நித்திய ஜீவனை பெற்று நீ மோட்சத்தில் நிலைத்தென்றும் வாழ்ந்திடுவாய் --- ஓ

ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து

ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து களைப்போடே என் ஏசு குருசை சுமந்தே என்நேசர் கொல்கதா மலையின் மேல் நடந்தே ஏறுகின்றார் 1. கன்னத்தில் அவர் ஓங்கி அறைய சின்னப் பிள்ளை போல் ஏங...

திருப்பாதம் நம்பி வந்தேன் - 167

திருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே தமதன்பை கண்டைந்தேன் தேவ சமூகத்திலே இளைப்பாறுதல் தரும் தேவா களைத்தோரைத் தேற்றிடுமே சிலுவை நிழல் எந்தன் தஞ்சம் சுகமாய் அங்குத் தங்கிடுவேன் என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர் இன்னல் துன்ப நேரத்திலும் கருத்தாய் விசாரித்து என்றும் கனிவோடென்னை நோக்கிடுமே மனம் மாற மாந்தர் நீரல்ல மன வேண்டுதல் கேட்டிடும் எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே இயேசுவே உம்மை அண்டிடுவேன் என்னைக் கைவிடாதிரும் நாதா என்ன நிந்தை நேரிடினும் உமக்காக யாவும் சகிப்பேன் உமது பெலன் ஈந்திடுமே விசுவாசத்தால் பிழைத்தோங்க வீரபாதைக் காட்டினீரே மலர்ந்து கனிதரும் வாழ்வை விரும்பி வரம் வேண்டுகிறேன் உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே உண்மையாய் வெட்கம் அடையேன் தமது முகப் பிரகாசம் தினமும் என்னில் வீசிடுதே சத்துரு தலை கவிழ்ந்தோட நித்தமும் கிரியை செய்திடும் என்னைத் தேற்றிடும் அடையாளம் இயேசுவே இன்று காட்டிடுமே பலர் தள்ளின மூலைக்கல்லே பரம சீயோன் மீதிலே பிரகாசிக்கும் அதை நோக்கி பதறாமலே காத்திருப்பேன்