உந்தன் நாமம் மகிமை பெற வேண்டும் கர்த்தாவே
உந்தன் அரசு விரைவில் வரவேண்டும் கர்த்தாவே
– ஜெபிக்கிறோம் நாங்கள் துதிக்கிறோம்
1. இந்தியா இரட்சகரை அறிய வேண்டுமே
இருளில் உள்ளோர் வெளிச்சத்தையே காண வேண்டுமே
2. சாத்தான் கோட்டை தகர்ந்து விழ வேண்டுமே
சாபம் நீங்கி சமாதானம் வரணுமே
3. கண்ணீர் சிந்தி கதறி நாங்கள் அழுகிறோம்
கரம்விரித்து உம்மை நோக்கி பார்க்கிறோம்
4. சிலுவை இரத்தம் தெளிக்கப்பட வேண்டுமே
ஜீவநதி பெருகியோட வேண்டுமே
5. ஜெபசேனை எங்கும் எழும்ப வேண்டுமே
உபவாச கூட்டம் பெருக வேண்டுமே
Comments
Post a Comment