Skip to main content

Posts

Showing posts from June, 2019

உன்னத தேவன் உன்னுடன்

உன்னத தேவன் உன்னுடன் இருக்க உள்ளமே கலங்காதே அவர் நல்லவரே என்றும் வல்லவரே நன்மைகள் குறையாதே பாவத்தில் இருந்த உன்னை அவர் பரிசுத்தமாக்கினார் தாழ்மையில் கிடந்த உன்னை தம் தயவால் தூக்கினார் – உன்னத அந்நாளில் தம் பாதம் அமர்ந்த அன்னாளின் ஜெபம் கேட்டார் அனாதையாய் தவித்த அந்த ஆகாரின் குரல் கேட்டார் – உன்னத இயேசு உன் முன் நடந்தால் நீ யோர்தானைக் கடந்திடலாம் விசுவாசம் உனக்கிருந்தால் அந்த எரிகோவைத் தகர்த்திடலாம் – உன்னத

ஆராதனை நாயகன் நீரே - 89

ஆராதனை நாயகன் நீரே ஆராதனை வேந்தனும் நீரே ஆயுள் முடியும் வரை உம்மை தொழுதிடுவேன் சரணங்கள் 1. ஆயிரம் பேர்களில் சிறந்தோர் ஆண்டவர் இயேசு நீரே விடிவெள்ளியே எந்தன் பிரியம் நீரே என்றென்றும் தொழுதிடுவேன் --- ஆராதனை 2. மாந்தர்கள் போற்றிடும் தெய்வம் மகிமையின் தேவன் நீரே முழங்கால் யாவுமே முடங்கிடுமே மகிழ்வுடன் துதித்திடவே --- ஆராதனை 3. முடிவில்லா ராஜ்ஜியம் அருள திரும்பவும் வருவேன் என்றீர் ஆயத்தமாய் நாம் சேர்ந்திடவே அனுதினம் வணங்கிடுவேன் -- ஆராதனை

வாதை உந்தன கூடாரத்தை அணுகாது - 186

வாதை உந்தன கூடாரத்தை அணுகாது மகனே பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே ஆமென் ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா 1. உன்னதமான கர்த்தரையே உறைவிடமாக்கிக் கொண்டாய் அடைக்கலமாம் ஆண்டவனை ஆதாயமாக்கிக் கொண்டாய் 2. ஆட்டுக்குட்டி இரத்தத்தினால் சாத்தானை ஜெயித்து விட்டோம் ஆவி உண்டு வசனம் உண்டு அன்றாடம் வெற்றி உண்டு 3. கர்த்தருக்குள் நம் பாடுகள் ஒரு நாளும் வீணாகாது அசையாமல் உறுதியுடன் அதிகமாய் செயல்படுவோம் 4. அழைத்தவரோ உண்மையுள்ளவர் பரிசுத்தமாக்கிடுவார் ஆவி ஆத்துமா சரீரமெல்லாம் குற்றமின்றி காத்திடுவார் 5. நம்முடைய குடியிருப்பு பரலோகத்தில் உண்டு வரப்போகும் இரட்சகரை எதிர்நோக்கி காத்திருப்போம் 6. அற்பமான ஆரம்பத்தை அசட்டை பண்ணாதே தொடங்கினவர் முடித்திடுவார் சொன்னதை செய்திடுவார் 7. ஆற்றல் அல்ல சக்தி அல்ல ஆவியினால் ஆகும் சோர்ந்திடாமல் நன்மை செய்வோம் துணையாளர் முன் செல்கிறார்

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு - 155

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு எப்போதும் வெற்றி உண்டு வெற்றி உண்டு -3 வெற்றி வெற்றி வெற்றி அல்லேலூயா அல்லேலுயா அல்லேலூயா  1. என்னென்ன துன்பம் வந்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன் யார் என்ன சொன்னாலும் நான் சோர்ந்து போகமாட்டேன் 2. என் ராஜா முன்னே செல்கிறார் வெற்றிப் பவனி செல்கிறார் குருத்தோலை கையில் எடுத்து நான் ஓசன்னா பாடிடுவேன் 3. சாத்தானின் அதிகாரமெல்லாம் என் நேசர் பறித்துக் கொண்டார் சிலுவையில் அறைந்து விட்டார் காலாலே மிதித்து விட்டார் 4. பாவங்கள் போக்கிவிட்டார் சாபங்கள் நீக்கி விட்டார் இயேசுவின் தழும்புகளால் சுகமானேன் சுகமானேன் 5. மேகங்கள் நடுவினிலே என் நேசர் வரப்போகிறார் கரம்பிடித்து அழைத்துச் செல்வார் கண்ணீரெல்லாம் துடைப்பார்

கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே

கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே பல்லவி கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே களிகூர்ந்து கீதம் பாடு! சாலேமின் ராஜா நம் சொந்தமானார் சங்கீதம் பாடி ஆடு!  அல்லேலூயா! அல்லேலூயா! (2) சரணங்கள் 1. பாவத்தின் சுமையகற்றி --- கொடும் பாதாள வழி விலக்கி பரிவாக நம்மைக் கரம் நீட்டிக் காத்த பரிசுத்த தேவன் அவரே அல்லேலூயா (2) --- கர்த்தாவின் 2. நீதியின் பாதையிலே --- அவர் நிதம் நம்மை நடத்துகின்றார்! எது வந்த போதும் மாறாத இன்ப புது வாழ்வைத் தருகின்றாரே அல்லேலூயா (2) --- கர்த்தாவின் 3. மறுமையின் வாழ்வினிலே --- இயேசு மன்னவன் பாதத்திலே பசிதாகமின்றி துதி கானம் பாடி பரனோடு நிதம் வாழுவோம்! அல்லேலூயா (2) --- கர்த்தாவின்

தேவா பிரசன்னம் தாருமே - 204

தேவா பிரசன்னம் தாருமேதேடி உம்பாதம் தொழுகிறோம் இயேசுவே உம் திவ்ய நாமத்திலே இன்பமுடன் கூடி வந்தோம் 1. வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதஸ்தலம் பணிந்து குனிந்து தொழுகிறோம் கனிந்தெம்மை கண்பாருமே --- தேவா 2. சாரோனின் ரோஜா லீலி புஷ்பம் சாந்த சொரூபி என் இயேசுவே ஆயிரம் பேரிலும் சிறந்தோராம் ஆண்டவரைத் தொழுகிறோம் --- தேவா 3. கர்த்தர் செய்த உபகாரங்கள் கணக்குரைத்து எண்ணலாகுமோ இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி இரட்சகரைத் தொழுகிறோம் --- தேவா 4. கர்த்தர் சமூகம் ஆனந்தமே பக்தர் சபையில் பேரின்பமே கர்த்தர் நாமத்தைக் கொண்டாடுகிறோம் சுத்தர்கள் போற்றும் தேவனே --- தேவா 5. நூற்றிருபது பேர் நடுவே தேற்றரவாளனே வந்தீரே உன்னத ஆவியை ஊற்றிடுமே மன்னவனே இந்நேரமே --- தேவா 6. எப்போ வருவீர் என் இயேசுவே ஏங்கி உள்ளம் உம்மைத் தேடுதே பறந்து விரைந்து தீவிரமே இறங்கி வாரும் இயேசுவே --- தேவா

ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு - 70

ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு கோடி கோடி ஸ்தோத்திரம் வாழ்வளிக்கும் இயேசு ராஜாவுக்கு வாழ் நாளெல்லாம் ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா பாடுவேன் ஆனந்த தொனியால் உயர்த்துவேன் 1. நீதியின் கரத்தினால் தாங்கி நடத்துவார் கர்த்தரே என் பெலன் எதற்குமே அஞ்சிடேன் --- ஜெயம் 2. அற்புதம் செய்பவர் அகிலம் படைத்தவர் யுத்தத்தில் வல்லவர் மீட்பர் ஜெயிக்கிறார் --- ஜெயம் 3. நம்பிக்கை தேவனே நன்மை தருபவர் வார்த்தையை அனுப்பியே மகிமைப் படுத்துவார் --- ஜெயம் 4. உண்மை தேவன் உருக்கம் நிறைந்தவர் என்னை காப்பவர் உறங்குவதில்லையே --- ஜெயம்

நான் உன்னைவிட்டு விலகுவதில்லை - 183

நான் உன்னைவிட்டு விலகுவதில்லை நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை நான் உன்னைக் காண்கின்ற தேவன் கண்மணி போல் உன்னைக் காண்பேன்(2) 1. பயப்படாதே நீ மனமே – நான் காத்திடுவேன் ...

ராஜா நீர் செய்த நன்மைகள்

ராஜா நீர் செய்த நன்மைகள் அவை எண்ணி முடியாதையா ஏறெடுப்பேன் நன்றிபலி என் ஜீவ நாளெல்லாம் நன்றி ராஜா இயேசு ராஜா (4) 1. அதிகாலை நேரம் தட்டிதட்டி எழுப்பி புது கிருபை தந்தீரையா ஆனந்த மழையில் நனைத்து நனைத்து தினம் நன்றி சொல்ல வைத்தீரையா-2 2. வேதத்தின் இரகசியம் அறிந்திட புரிந்திட உம் வெளச்சம் தந்தீரையா பாதம் அமர்ந்து நான் உம் குரல் கேட்கும் பாக்கியம் தந்தீரையா 3. ஒவ்வொரு நாளும் உணவும் உடையும் தந்து பாதுகாத்து வந்தீரையா உடல் சுகம் தந்து ஒரு குறைவின்றி வழிநடத்தி வந்தீரையா 4. துன்பத்தின் பாதையில் நடந்த அந்நாளில் தூக்கிச் சென்றீரையா அன்பர் உம்கரத்தால் அணைத்துஅணைத்து தினம் அதிசயம் செய்தீரையா 5. கூப்பிட்ட நாளில் மறுமொழி கொடுத்து விடுதலை தந்தீரையா குறைகளை நீக்கி கறைகளை போக்கி கூடவே வந்தீரையா

அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் - 131

அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் ஆராதனை ஆராதனை முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன் முழு பெலத்தோடு அன்புகூறுவேன் 1. எபிநேசரே எபிநேசரே இதுவரையில் உதவினீரே –உம்மை 2. எல்ரோயீ எல்ரோயீ என்னைக் கண்டீரே நன்றி ஐயா 3. யேகோவா ராப்பா யேகோவா ராப்பா சுகம் தந்தீரே நன்றி ஐயா

அதிகாலையில் (அன்பு நேசரே) உம்

அதிகாலையில் (அன்பு நேசரே) உம் திருமுகம் தேடி அர்ப்பணித்தேன் என்னையே ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள் அப்பனே உமக்குத் தந்தேன் ஆராதனை ஆராதனை (2) அன்பர் இயேசு ராஜனுக்கே ஆவி...

ஊற்றுத் தண்ணீரே எந்தன் - 264

ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே ஜீவ நதியே என்னில் பொங்கிப் பொங்கிவா (2) ஆசீர்வதியும் என் நேசக் கர்த்தரே ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும் 1. கன்மலையைப் பிளந்து வனா...

இயேசு சுமந்து கொண்டாரே

இயேசு சுமந்து கொண்டாரே நான் சுமக்க தெவையில்லை இயேசுவின் காயங்களால் சுகமானேன் சுகமானேன் பெலவீனம் சுமந்து கொண்டார் பெலவானாய் மாற்றிவிட்டார் – இயேசுவின் என் நோய்கள் சுமந்து கொண்டார் என் துக்கம் ஏற்றுக் கொண்டார்

என்னை நேசிக்கின்றாயா?

என்னை நேசிக்கின்றாயா? என்னை நேசிக்கின்றாயா? கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா?  சரணங்கள் 1. பாவத்தின் அகோரத்தைப் பார் பாதகத்தின் முடிவினைப் பார...

அனைத்து சமயத்து மெய்ப்பொருள்

அனைத்து சமயத்து மெய்ப்பொருள் இயேசுவே வேதங்கள் கூறிடும் கருப்பொருள் இயேசுவே மெய்ப்பொருள் இயேசுவே... உண்மை என்பது ஒன்றே ஒன்றாகும் அண்மையில் சேர்ந்திட்டால் அதுவும...

பரிசுத்தர் கூட்டம் நடுவில் - 203

பரிசுத்தர் கூட்டம் நடுவில் ஜொலித்திடும் சுத்த ஜோதியே அரூபியே இவ்வேளையில் அடியார் நெஞ்சம் வாரீரோ சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியே விரும்பா அசுத்தம் யாவும் நீக்குமே பாவி நீச பாவி நானையா தேவா இரக்கம் செய்யமாட்டீரோ மீன் கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோ கல் தின்ன கொடுக்கும் பெற்றோர் உண்டோ பொல்லாதோர் கூடச் செய்திடார் நற்பிதா நலம் அருள்வார் பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை யாரும் காணா உள் அலங்கோலத்தை மனம் நொந்து மருளுகின்றேன் பரிசுத்தம் கெஞ்சுகின்றேன் துணை வேண்டும் தகப்பனே உலகிலே என்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டே என் ஜீவன் எல்லையெங்கிலும் பரிசுத்தம் என எழுதும்

யாக்கோபை போல நான்

யாக்கோபை போல நான் போராடுவேன் எலியாவை போல நான் ஜெபித்திடுவேன்  விடமாட்டேன் விடமாட்டேன்  யாக்கோபை போல நான் விடவே மாட்டேன் 1. அன்னாளை போல ஆலயத்தில் அழுது நான் ஜெபித்த...

விசுவாசியே நீ பதறாதே - 234

கர்த்தரின் கை குறுகவில்லை 1. கர்த்தரின் கை குறுகவில்லை கர்த்தரின் வாக்கு மாறிடாதே சுத்தர்களாய் மாறிடவே சுதன் அருள் புரிந்தனரே பல்லவி விசுவாசியே நீ பதறாதே விசுவாசியே நீ கலங்காதே விசுவாசத்தால் நீதிமான் இன்றும் என்றும் பிழைப்பான் 2. திருச்சபையே நீ கிரியை செய்வாய் திவ்விய அன்பில் பெருகிடுவாய் தலைமுறையாய் தலைமுறையாய் தழைத்திட அருள் புரிவாய் --- விசுவாசியே 3. நெஞ்சமே நீ அஞ்சிடாதே தஞ்சம் இயேசு உன் அரணே தம் ஜனத்தை சீக்கிரமாய் தம்முடன் சேர்த்துக் கொள்வார் --- விசுவாசியே 4. மேகம் போன்ற வாக்குத்தத்தம் சூழ நின்றே காத்திருக்க விசுவாசத்தால் உரிமை கொள்வாய் விரைந்து முன் ஏகிடுவாய் --- விசுவாசியே

உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே

உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே உம்மையன்றி யாரைப் பாடுவேன் – ஏசையா உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே 1. பரிசுத்தமே பரவசமே பரனே சருளே வரம் பொருளே தேடினதால் கண்டடைந்தேன் பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் 2. புது எண்ணையால் புது பெலத்தால் புதிய கிருபை புதுகவியால் நிரப்பி நிதம் நடத்துகின்றீர் நூதன சாலேமில் சேர்த்திடுவீர் 3. நெருக்கத்திலே உம்மையழைத்தேன் நெருங்கி உதவி எனக்களித்தீர் திசை கெட்டெங்கும் அலைந்திடாமல் தீவிரம் வந்தென்னை தாங்குகின்றீர் 4. என்முன் செல்லும் உம் சமூகம் எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல் உமது கோலும் உம் தடியும் உண்மையாய் என்னையும் தேற்றிடுதே 5. கனிசெடி நீர் நிலைத்திருக்கும் கொடியாய் அடியேன் படர்ந்திலங்க கிளை நறுக்கி களை பிடுங்கி கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்தீர் 6. என் இதய தெய்வமே நீர் எனது இறைவா ஆருயிரே நேசிக்கிறேன் இயேசுவே உம் நேசமுகம் என்று கண்டிடுவேன் --- உம்பாதம் 7. சீருடனே பேருடனே சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில் சீக்கிரமாய் சேர்த்திடுவீர் சீயோனை வாஞ்சித்து நாடிடுவேன் --- உம்பாதம்

கூடாதது ஒன்றுமில்லையே

கூடாதது ஒன்றுமில்லையே (4) தேவனால் கூடாதது கூடாதது ஒன்றுமில்லையே மனுஷரால் கூடாதது தேவனால் கூடுமே (4) 1. ஒரே ஒரு வார்த்தை சொன்னாரே வேலைக்காரன் சொஸ்தமானானே சுத்தமாகு என்ற...

குதூகலம் கொண்டாட்டமே

குதூகலம் கொண்டாட்டமே என் இயேசுவின் சந்நிதானத்தில் ஆனந்தம் ஆனந்தமே என் அன்பரின் திருப்பாதத்தில்   1.   பாவமெல்லாம் பறந்தது நோய்களெல்லாம் தீர்ந்தது இயேசுவின் இரத்தத்தினால் கிறிஸ்துவுக்குள் வாழ்வு கிருபையால் மீட்பு பரிசுத்த ஆவியினால்   2.   தேவாதி தேவன் தினம்தோறும் தங்கும் தேவாலயம் நாமே ஆவியான தேவன் அச்சாரமானார் ஆதிசயம் அதிசயமே   3.   வல்லவராம் இயேசு வாழ வைக்கும் தெய்வம் வெற்றிமேலே வெற்றி தந்தார் ஒருமனமாய் கூடி ஓசான்னா பாடி ஊரெல்லாம் கொடியேற்றுவோம்   4.   எக்காள சத்தம் தூதர்கள் கூட்டம் நேசர் வருகின்றார் ஒருநொடி பொழுதில் மறுரூபமாவோம் மகிமையில் பிரவேசிப்போம்

நீரின்றி வாழ்வேது இறைவா

நீரின்றி வாழ்வேது இறைவா உம் நினைவின்றி மகிழ்வேது தேவா உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்த போதும் உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே போதும் பல கோடி வார்த்தைகள் நான் கே...

விண்ணப்பத்தைக் கேட்பவரே

விண்ணப்பத்தைக் கேட்பவரே – என் கண்ணீரைக் காண்பவரே சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா 1. உம்மால் கூடும் எல்லாம் கூடும் ஒரு வார்த்தை சொன்னால் போதும் 2. மனதுருகி கரம் நீட்டி அதிசயம் செய்பவரே 3. சித்தம் உண்டு சுத்தமாகு என்று சொல்லி சுகமாக்கினீர் 4. என் நோய்களை சிலுவையிலே சுமந்து தீர்த்தீரைய்யா 5. குருடர்களை பார்க்கச் செய்தீர் முடவர்கள் நடக்கச் செய்தீர் 6. உம் காயத்தால் சுகமானேன் ஒரு கோடி ஸ்தோத்திரம்

ஸ்தோத்திரம் இயேசு நாதா

1. ஸ்தோத்திரம் இயேசு நாதா உமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசு நாதா ஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார் திரு நாமத்தின் ஆதரவில்! 2. வான துதர் சேனைகள் மனோகர கீதங்களால் எப்போதும் ஓய்வின்றிப் பாடித் துதிக்கப் பெறும் மன்னவனே உமக்கு! 3. இத்தனை மகத்துவமுள்ள பதவி இவ்வேழைகள் எங்களுக்கு எத்தனை மாதயவு நின் கிருபை எத்தனை ஆச்சரியம்! 4. நின் உதிரமதினால் திறந்த நின் ஜீவப் புது வழியாம் நின் அடியார்க்குப் பிதாவின் சந்நிதி சேரவுமே சந்ததம்! 5. இன்றைத் தினமதிலும் ஒருமித்துக்கூட உம் நாமத்தினால் தந்த நின் கிருபைக்காய் உமக்கென்றும் ஸ்தோத்திரம், ஸ்தோத்திரமே! 6. நீரல்லால் எங்களுக்குப் பரலோகில் யாருண்டு ஜீவநாதா நீரேயன்றி இகத்தில் வேறொரு தேட்டமில்லை பரனே!

உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும்

உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும் அழைச்சது நீங்க நடத்திச் செல்வீங்க   1.   திட்டங்கள் தருபவரும் நீர்தானையா செயல்படுத்தி மகிழ்பவரும் நீர்தானையா எஜமானனே என் ராஜனே எஜமா...

பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்

பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய் நான் இலக்கை நோக்கி ஓடுகிறேன் ஓடுகிறேன் நான் என் இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன் அல்லேலூயா அல்லேலூயா இலாபமான அனைத்தையுமே நான் நஷ்டம் என்று கருதுகிறேன் இயேசு ராஜாவின் இந்த வேலைக்காக மகிழ்ச்சியுடன் நான் ஓடுகிறேன் எத்தனைதான் இடர்கள் வந்தாலும் விசுவாசத்திலே நிலைத்திருப்பேன் எனக்காக அப்பா நியமித்த இந்த பாதையிலே நான் ஓடுகிறேன் என் மணவாளன் என் இயேசு ராஜாவை நான் காணவே வாஞ்சிக்கிறேன் என் அசை எல்லாம் என் இயேசுதானே அவர் பொன்முகம் தான் நான் பார்க்கணுமே

பரலோகமே என் சொந்தமே

பல்லவி பரலோகமே என் சொந்தமே என்று காண்பேனோ என் இன்ப இயேசுவை என்று காண்பேனோ சரணங்கள் 1. வருத்தம் பசி தாகம் மனத்துயரம் அங்கே இல்லை விண் கிரீடம் வாஞ்சிப்பேன் விண்ணவர் பாதம் சேர்வேன் 2. சிலுவையில் அறையுண்டேன் இனி நானல்ல இயேசுவே அவரின் மகிமையே எனது இலட்சியமே 3. இயேசு என் நம்பிக்கையாம் இந்த பூமியும் சொந்தமல்ல பரிசுத்த சிந்தையுடன் இயேசுவைப் பின்பற்றுவேன் 4. ஓட்டத்தை ஜெயமுடன் நானும் ஓடிட அருள் செய்வார் விசுவாச பாதையில் சோராது ஓடிடுவேன் 5. பரம சுகம் காண்பேன் பரன் தேசம் அதில் சேர்வேன் இராப் பகல் இல்லையே இரட்சகர் வெளிச்சமே 6. அழைப்பின் சத்தம் கேட்டு நானும் ஆயத்தமாகிடுவேன் நாட்களும் நெருங்குதே வாஞ்சையும் பெருகுதே 7. பளிங்கு நதியோரம் சுத்தர் தாகம் தீர்த்திடுவார் தூதர்கள் பாடிட தூயனை தரிசிப்பேன்

கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே

கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே களிகூர்ந்து கீதம் பாடு! சாலேமின் ராஜா நம் சொந்தமானார் சங்கீதம் பாடி ஆடு! அல்லேலூயா! அல்லேலூயா! (2) 1. பாவத்தின் சுமையகற்றி --- கொடும் பாதாள வழி விலக்கி பரிவாக நம்மைக் கரம் நீட்டிக் காத்த பரிசுத்த தேவன் அவரே அல்லேலூயா (2) --- கர்த்தாவின் 2. நீதியின் பாதையிலே --- அவர் நிதம் நம்மை நடத்துகின்றார்! எது வந்த போதும் மாறாத இன்ப புது வாழ்வைத் தருகின்றாரே அல்லேலூயா (2) --- கர்த்தாவின் 3. மறுமையின் வாழ்வினிலே --- இயேசு மன்னவன் பாதத்திலே பசிதாகமின்றி துதி கானம் பாடி பரனோடு நிதம் வாழுவோம்! அல்லேலூயா (2) --- கர்த்தாவின்

திருக்கரத்தால் தாங்கி என்னை

திருக்கரத்தால் தாங்கி என்னை திருச்சித்தம் போல் நடத்திடுமே குயவன் கையில் களிமண் நான் அனுதினமும் வனைந்திடுமே 1. உம் வசனம் தியானிக்கையில் இதயமதில் ஆறுதலே காரிருளில் நடக்கையிலே தீபமாக வழி நடத்தும் 2. ஆழ்கடலில் அலைகளினால் அசையும்போது என் படகில் ஆத்ம நண்பர் இயேசு உண்டே சேர்ந்திடுவேன் அவர் சமூகம் 3. அவர் நமக்காய் ஜீவன் தந்து அளித்தனரே பெரிய மீட்பு கண்களினால் காண்கிறேனே இன்பக் கானான் தேசமதை 

சிங்கார மாளிகையில்

சிங்கார மாளிகையில்  ஜெயகீதங்கள் பாடிடுவோம் சீயோன் மணவாளனுடன் 1. ஆனந்தம் பாடி அன்பரைச் சேர்ந்து ஆறுதலடைந்திடுவோம் - அங்கே அலங்கார மகிமையின் கிரீடங்கள் சூடி அன்பரில் மகிழ்ந்திடுவோம் 2. துயரப்பட்டவர் துதித்துப்பாடுவார் துதியின் உடையுடனே அங்கே உயரமாம் சீயோன் உன்னதரோடு களித்து கவி பாடுவோம் 3. முள் முடி நமக்காய் அணிந்த மெய் இயேசுவின் திருமுகம் கண்டிடுவோம் - அங்கே முத்திரையிட்ட சுத்தர்கள் வெள்ளங்கி தரித்தோராய் துதித்திடுவார் 4. பூமியின் அரசை புதுபாட்டாய் பாடி புன்னகை பூத்திடுவோம் புது எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்பட்டோராய் மண்ணாசை ஒழித்திடுவோம் 5. அவருரைத்த அடையாளங்களெல்லாம் தவறாமல் நடக்கிறதே - அவர் வரும்வேளை யறியாதிருப்பதால் எப்போதும் ஆயத்தமாயிருப்போம்

ஜீவனுள்ள தேவனே வாரும்

1. ஜீவனுள்ள தேவனே வாரும் ஜீவ பாதையிலே நடத்தும் ஜீவத்தண்ணீர் ஊறும் ஊற்றிலே ஜீவன் பெற என்னை நடத்தும் இயேசுவே நீர் பெரியவர் இயேசுவே நீர் பரிசுத்தர் இயேசுவே நீர் நல்லவர் இயேசுவே நீர் வல்லவர் 2. பாவிகள் துரோகிகள் ஐயா பாவ ஆதாம் மக்களே தூயா பாதகர் எம் பாவம் போக்கவே பாதகன் போல் தொங்கினீரல்லோ 3. ஐந்து கண்ட மக்களுக்காக ஐந்து காயமேற்ற நேசரே நொந்துருகி வந்த மக்கள் மேல் நேச ஆவி வீசச் செய்குவீர் 4. வாக்குத்தத்தம் செய்த கர்த்தரே வாக்கு மாறா உண்மை நாதனே வாக்கை நம்பி வந்து நிற்கிறோம் வல்ல ஆவி மாரி ஊற்றுவீர் 5. நியாயத்தீர்ப்பின் நாள் நெருங்குதே நேசர் வர காலமாகுதே மாய லோகம் நம்பி மாண்டிடும் மானிடரை மீட்க மாட்டீரோ?

அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே

அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே உம் அனுக்கிரகம் தரவேண்டுமே என்னால் ஒன்றும் கூடாதையா எல்லாம் உம்மால் கூடும் 1. என் ஞானம் கல்வி செல்வங்கள் எல்லாம் ஒன்றுமில்லை குப்பை என்றெண்ணுகிறேன் என் நீதி நியாயங்கள் அழுக்கான கந்தை என்றே உணர்ந்தேன் என் இயேசுவே --- அனுதினமும் 2. அழைத்தவரே உம்மில் பிழைத்திடவே அவனியில் உமக்காய் உழைத்திடவே அர்ப்பணிக்கின்றேன் என்னை இன்று ஏற்றுக் கொள்ளும் என் இயேசுவே --- அனுதினமும்

மகிழ்வோம் மகிழ்வோம்

1. மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம் இயேசு இராஜன் நம் சொந்தமாயினார் இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர் எந்தன் உள்ளத்தின் சொந்தமானார் ஆ ஆனந்தமே பரமானந்தமே இது மாபெரும் பாக்கியமே - இந்த 2. சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார் தூரம் போயினும் கண்டுக்கொண்டார் தமது ஜீவனை எனக்கும் அளித்து ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார் 3. எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று என்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார் என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை அவர் வரும் வரைக் காத்துக் கொள்வேன் 4. அவர் வரும் நாளினில் என்னைக் கரம் அசைத்து அன்பாய்க் கூப்பிட்டுச் சேர்த்துக்கொள்வார் அவர் சமூகமதில் அங்கே அவருடனே ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன் 

அத்திமரம் போல் எத்தனை பேர்கள் வாழுகிறார்கள்

அத்திமரம் போல் எத்தனை பேர்கள் வாழுகிறார்கள்? தினம் அர்த்தமில்லாமல் கர்த்தர் இல்லாமல் வாழுகிறார்கள்? 1. பார்க்க பார்க்க அழகாய் இருந்தது அத்திமரம் இயேசு ஆசையோடு க‌னியைத் தேடினார் ஏமாற்ற‌ம் இப்ப‌டித்தானே ம‌னித‌ர்க‌ள், வாழும் வாழ்க்கை ப‌ல‌ வேஷ‌ம் 2. ஊருக்குள்ளே உத்த‌ம‌ர் போல் ந‌டிப்பார்க‌ள் ஆனால் உண்மையிலே அத்தி ம‌ர‌ம் போல் இருப்பார்க‌ள் பேசுவ‌தெல்லாம் வேத‌ங்க‌ள், போடுவ‌தெல்லாம் வேஷ‌ங்க‌ள் 3. ஊருக்கு எல்லாம் உபதேசங்கள் செய்தாலும் வெறும் புகழுக்காக தான தர்மம் செய்தாலும் அன்பு அதிலே இல்லையென்றால், வாழ்ந்து என்ன லாபம் தான் 4. ம‌னித‌னை ம‌ட்டும் ந‌ம்புவ‌தாலே ப‌ய‌னில்லை ஆனால் இறைவ‌னை ம‌ட்டும் ந‌ம்பிடுவாய் துன்ப‌மில்லை க‌வ‌லைக‌ள் எல்லாம் போக்கிடுவார், க‌ண்ணீர் எல்லாம் துடைத்திடுவார்

அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும் - 238

அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும் இந்த லேசான உபத்திரவம் சோர்ந்து போகாதே - நீ 1. உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள் புதிதாக்க படுகின்ற நேரமிது --- சோர்ந்து 2. ஈடு இணையில்லா மகிமை இதனால் நமக்கு வந்திடுமே --- சோர்ந்து 3. காண்கின்ற உலகம் தேடவில்லை காணாதப் பரலோகம் நாடுகிறோம் --- சோர்ந்து 4. கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால் பாக்கியம் நமக்கு பாக்கியமே --- சோர்ந்து 5. மன்னவன் இயேசு வருகையிலே மகிழ்ந்து நாமும் களிகூருவோம் --- சோர்ந்து 6. மகிமையின் தேவ ஆவிதாமே மண்ணான நமக்குள் வாழ்கின்றார் --- சோர்ந்து 

ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம்

ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து ஆறுதல் அடைகின்றேன் அமைதி பெறுகின்றேன் 1. புயல் வீசும் கடலில் தடுமாறும் படகை தாங்கிடும் நங்கூரமே (3) தினம் 2. எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச எனைக் காக்கும் புகலிடமே – தினம் 3. நிலையற்ற வாழ்வின் நிம்மதியே நீங்காத பேரின்பமே – என்னைவிட்டு 4. இருள் நீக்கும் சுடரே என்இயேசு ராஜா என் வாழ்வின் ஆனந்தமே 5. மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா மாபெரும் சந்தோஷமே 6. காயங்கள் ஆற்றி கண்ணீரைத் துடைக்கும் நல்ல சமாரியனே

எந்தன் ஜெபவேளை - 228

எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன் தேவா பதில் தாருமே எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே உம்மை நான் நாடி வந்தேன் 1. சோராது ஜெபித்திட ஜெப ஆவி வரம் தாருமே தடை யாவும் அகற்றிடுமே தயை கேட்டு உம்பாதம் வந்தேன் 2. உம்மோடு எந்நாளும் உறவாட அருள் செய்யுமே கர்த்தாவே உம் வார்த்தையை கேட்டிட காத்திருப்பேனே 3. நம்பிக்கை இல்லாமல் அழிகின்ற மாந்தர்களை மீட்டிடும் என் இயேசுவே போராடி ஜெபிக்கின்றேன் நாதா 4. நாளெல்லாம் பாதத்தில் கர்த்தாவே காத்திருப்பேன் கண்ணீர் ஜெபம் கேளுமே கருணையின் பிரவாகம் நீரே

எனக்காய் ஜீவன் விட்டவரே

எனக்காய் ஜீவன் விட்டவரே 1. எனக்காய் ஜீவன் விட்டவரே என்னோடிருக்க எழுந்தவரே என்னை என்றும் வழி நடத்துவாரே என்னைச் சந்திக்க வந்திடுவாரே பல்லவி இயேசு போதுமே இயேசு போதுமே எந்த நாளிலுமே எந்நிலையிலுமே எந்தன் வாழ்வினிலே இயேசு போதுமே 2. பிசாசின் சோதனை பெருகிட்டாலும் சோர்ந்து போகாமல் முன் செல்லவே உலகமும் மாமிசமும் மயக்கிட்டாலும் மயங்கிடாமல் முன்னேறவே --- இயேசு 3. புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார் அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார் ஆத்துமாவைத் தினம் தேற்றிடுவார் மரணப் பள்ளத்தாக்கில் காத்திடுவார் --- இயேசு 4. மனிதர் என்னைக் கைவிட்டாலும் மாமிசம் அழுகி நாறிட்டாலும் ஐசுவரியம் யாவும் அழிந்திட்டாலும் ஆகாதவன் என்று தள்ளிவிட்டாலும் --- இயேசு

அநாதி சிநேகத்தால்

1. அநாதி சிநேகத்தால் என்னை நேசித்தீரைய்யா காருண்யத்தினால் என்னை இழுத்துக் கொண்டீரே உங்க அன்பு பெரியது உங்க இரக்கம் பெரியது உங்க கிருபை பெரியது உங்க தயவு பெரியது 2. அனாதையாய் அலைந்த என்னை தேடி வந்தீரே அன்பு காட்டி அரவணைத்து காத்துக் கொண்டீரே - உங்க 3. நிலையில்லாத உலகத்தில் அலைந்தேனய்யா நிகரில்லாத இயேசுவே அணைத்துக் கொண்டீரே - உங்க 4. தாயின் கருவில் தோன்றுமுன்னே தெரிந்துக் கொண்டீரே தாயைப் போல ஆற்றி தேற்றி அரவணைத்தீரே - உங்க 5. நடத்தி வந்த பாதைகளை நினைக்கும் போதெல்லாம் கண்ணீரோடு நன்றி சொல்லி துதிக்கிறேனைய்யா - உங்க 6. கர்த்தர் செய்ய நினைத்தது தடைபடவில்லை சகலத்தையும் நன்மையாக செய்து முடித்தீரே - உங்க

பரலோகமே உம்மைத் துதிப்பதால்

பரலோகமே உம்மைத் துதிப்பதால் கர்த்தாவே அங்கே வாழ்கிறீர் உம் ஆலயத்தில் உம்மைத் துதிக்கிறோம் கர்த்தாவே எழுந்தருளும்  துதிக்கிறோம் துதிக்கிறோம் ஒன்றாக கூடித் துதிக்கிறோம் (2) - அல்லேலூயா 1. உந்தன் நாமம் உயர்த்தும் இடத்தில் அங்கே வாசம் செய்வீர் (2) --- துதிக்கிறோம் 2. உம்மைப்போல் ஒரு தெய்வமில்லை சர்வ சிருஷ்டிகரே (2) --- துதிக்கிறோம் 3. துதியும் கனமும் மகிமையெல்லாம் உமக்கே செலுத்துகிறோம் (2) --- துதிக்கிறோம்