Skip to main content

எந்நாளுமே துதிப்பாய்...

பல்லவி
எந்நாளு மேதுதிப்பாய் -என்னாத்துமாவே , நீ
எந்நாளு மேதுதிப்பாய் !
அனுபல்லவி
இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த
எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது-எந்நாளு
சரணங்கள்
பாவங்கள் எத்தனையோ-நினையாதிருந்தாருன்
பாவங்கள் எத்தனையோ?
பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்
பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி -எந்நாளு 
எத்தனையோ கிருபை - உன்னுயிர்க்குச் செய்தாரே ,
எத்தனையோ கிருபை?
நித்தமுனை முடி சூட்டினதுமன்றி ,
நேயமதாக ஜீவனை மீட்டதால் .-எந்நாளு
நன்மையாலுன் வாயை நிறைத்தாரே ,பூர்த்தியாய்
நன்மையாலுன் வாயை ;
உன்வயது கழுகைப் போல் பலங் கொண்டு
ஓங்கு இளமை போல் ஆகவே செய்தததால் -எந்நாளு 
பூமிக்கும் வானத்துக்கும் -உள்ள தூரம் போலவே ,
பூமிக்கும் வானத்துக்கும் ;
சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள்
சாலவும் தங்குமே ,சத்தியமே யிது-ennalu 
மன்னிப்பு மாட்சிமையாம் -மாதேவனருளும்
மன்னிப்பு மாட்சிமையம் ;
எண்ணுவாயோ கிழக்கு மேற்கின் தூரமே ?
என்னில் உன் பாவம் அகன்றதத்தூரமே-எந்நாளுமே 
தந்தைதன் பிள்ளைகட்கு - தயவோடிரங்கானோ
தந்தை தன பிள்ளைகட்கு ?
எந்த வேளையும் அவரோடு தங்கினால்;
சொந்தம் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே .-எந்நாளு

Comments

Popular posts from this blog

விசுவாசியே நீ பதறாதே - 234

கர்த்தரின் கை குறுகவில்லை 1. கர்த்தரின் கை குறுகவில்லை கர்த்தரின் வாக்கு மாறிடாதே சுத்தர்களாய் மாறிடவே சுதன் அருள் புரிந்தனரே பல்லவி விசுவாசியே நீ பதறாதே விசுவாசியே நீ கலங்காதே விசுவாசத்தால் நீதிமான் இன்றும் என்றும் பிழைப்பான் 2. திருச்சபையே நீ கிரியை செய்வாய் திவ்விய அன்பில் பெருகிடுவாய் தலைமுறையாய் தலைமுறையாய் தழைத்திட அருள் புரிவாய் --- விசுவாசியே 3. நெஞ்சமே நீ அஞ்சிடாதே தஞ்சம் இயேசு உன் அரணே தம் ஜனத்தை சீக்கிரமாய் தம்முடன் சேர்த்துக் கொள்வார் --- விசுவாசியே 4. மேகம் போன்ற வாக்குத்தத்தம் சூழ நின்றே காத்திருக்க விசுவாசத்தால் உரிமை கொள்வாய் விரைந்து முன் ஏகிடுவாய் --- விசுவாசியே

அனைத்து சமயத்து மெய்ப்பொருள்

அனைத்து சமயத்து மெய்ப்பொருள் இயேசுவே வேதங்கள் கூறிடும் கருப்பொருள் இயேசுவே மெய்ப்பொருள் இயேசுவே... உண்மை என்பது ஒன்றே ஒன்றாகும் அண்மையில் சேர்ந்திட்டால் அதுவும...

எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம்

எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் - தேவா என்றென்றும் நான் பாடுவேன் இந்நாள் வரை என் வாழ்விலே நீர் செய்த நன்மைக்கே 1. பூமியில் வாழ்கின்ற யாவும் அதின் மேல் உள்ள ஆகாயமும் வான்தூதர் சேனைகள் யாவும் தேவா உம்மைப் போற்றுதே 2. சூரிய சந்திரரோடே சகல நட்சத்திர கூட்டமும் ஆகாயப் பறவைகள் யாவும் தேவா உம்மைப் போற்றுதே 3. காட்டினில் வாழ்கின்ற யாவும் கடும் காற்றும் பனித் தூறலும் நாட்டினில் வாழ்கின்ற யாவும் நாதா உம்மைப் போற்றுதே 4. பாவ மனுக்குலம் யாவும் தேவா உம் அன்பினை உணர்ந்தே சிலுவையின் தியாகத்தைக் கண்டு ஒயா துதி பாடுதே