Skip to main content

எனக்காய் ஜீவன் விட்டவரே

1. எனக்காய் ஜீவன் விட்டவரே 
என்னோடிருக்க எழுந்தவரே 
என்னை என்றும் வழி நடத்துவாரே 
என்னை சந்திக்க வந்திடுவாரே 

இயேசு போதுமே இயேசு போதுமே 
எந்த நாளிலுமே எந்நிலையிலுமே 
எந்தன் வாழ்வினிலே இயேசு போதுமே 

2. பிசாசின் சோதனை பெருகிட்டாலும் 
சோர்ந்து போகாமல் முன் செல்லவே 
உலகமும் மாமிசமும் மயங்கிட்டாலும் 
மயங்கிடாமல் முன் செல்லவே 

3. புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார் 
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார் 
ஆத்துமாவை நிதம் தேற்றிடுவார் 
மரணப் பள்ளத்தாக்கில் காத்திடுவார் 

4. மனிதர் என்னைக் கைவிட்டாலும் 
மாமிசம் அழுகி நாறிட்டாலும் 
ஐஸ்வரியம் யாவும் அழிந்திட்டாலும் 
ஆகாதவன் என்று தள்ளி விட்டாலும் 

Comments

Popular posts from this blog

விசுவாசியே நீ பதறாதே - 234

கர்த்தரின் கை குறுகவில்லை 1. கர்த்தரின் கை குறுகவில்லை கர்த்தரின் வாக்கு மாறிடாதே சுத்தர்களாய் மாறிடவே சுதன் அருள் புரிந்தனரே பல்லவி விசுவாசியே நீ பதறாதே விசுவாசியே நீ கலங்காதே விசுவாசத்தால் நீதிமான் இன்றும் என்றும் பிழைப்பான் 2. திருச்சபையே நீ கிரியை செய்வாய் திவ்விய அன்பில் பெருகிடுவாய் தலைமுறையாய் தலைமுறையாய் தழைத்திட அருள் புரிவாய் --- விசுவாசியே 3. நெஞ்சமே நீ அஞ்சிடாதே தஞ்சம் இயேசு உன் அரணே தம் ஜனத்தை சீக்கிரமாய் தம்முடன் சேர்த்துக் கொள்வார் --- விசுவாசியே 4. மேகம் போன்ற வாக்குத்தத்தம் சூழ நின்றே காத்திருக்க விசுவாசத்தால் உரிமை கொள்வாய் விரைந்து முன் ஏகிடுவாய் --- விசுவாசியே

அனைத்து சமயத்து மெய்ப்பொருள்

அனைத்து சமயத்து மெய்ப்பொருள் இயேசுவே வேதங்கள் கூறிடும் கருப்பொருள் இயேசுவே மெய்ப்பொருள் இயேசுவே... உண்மை என்பது ஒன்றே ஒன்றாகும் அண்மையில் சேர்ந்திட்டால் அதுவும...

எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம்

எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் - தேவா என்றென்றும் நான் பாடுவேன் இந்நாள் வரை என் வாழ்விலே நீர் செய்த நன்மைக்கே 1. பூமியில் வாழ்கின்ற யாவும் அதின் மேல் உள்ள ஆகாயமும் வான்தூதர் சேனைகள் யாவும் தேவா உம்மைப் போற்றுதே 2. சூரிய சந்திரரோடே சகல நட்சத்திர கூட்டமும் ஆகாயப் பறவைகள் யாவும் தேவா உம்மைப் போற்றுதே 3. காட்டினில் வாழ்கின்ற யாவும் கடும் காற்றும் பனித் தூறலும் நாட்டினில் வாழ்கின்ற யாவும் நாதா உம்மைப் போற்றுதே 4. பாவ மனுக்குலம் யாவும் தேவா உம் அன்பினை உணர்ந்தே சிலுவையின் தியாகத்தைக் கண்டு ஒயா துதி பாடுதே