Skip to main content

ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே

ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே 
ஜீவநதியே என்னில் பொங்கி பொங்கிவா 
ஆசீர்வதியும் என் நேச கர்த்தரே 
ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும் 

1. கன்மலையைப் பிளந்து வனாந்திரத்திலே 
கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே 
பள்ளத்தாக்கிலும் மலைகளிலும் 
தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே 

2. ஜீவத் தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தரே 
ஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுமே 
கனிதந்திட நான் செழித்தோங்கிட 
கர்த்தரின் கரத்தில் நித்தம் கனம் பெற்றிட 

3. இரட்சிப்பின் ஊற்றுக்கள் எந்தன் சபைதனிலே 
எழும்பிட இந்த வேளை இரங்கிடுமே 
ஆத்ம பலமும் பரிசுத்தமும் 
ஆவலுடன் பெற்றிடவே வரம் தாருமே 

4. திறக்கப்பட்டதாம் ஊற்று சிலுவையிலே 
இரட்சகரின் காயங்களில் வெளிப்படுதே 
பாவக் கறைகள் முற்றும் நீங்கிட 
பரிசுத்த சமூகத்தில் ஜெயம் பெற்றிட

Comments

Popular posts from this blog

விசுவாசியே நீ பதறாதே - 234

கர்த்தரின் கை குறுகவில்லை 1. கர்த்தரின் கை குறுகவில்லை கர்த்தரின் வாக்கு மாறிடாதே சுத்தர்களாய் மாறிடவே சுதன் அருள் புரிந்தனரே பல்லவி விசுவாசியே நீ பதறாதே விசுவாசியே நீ கலங்காதே விசுவாசத்தால் நீதிமான் இன்றும் என்றும் பிழைப்பான் 2. திருச்சபையே நீ கிரியை செய்வாய் திவ்விய அன்பில் பெருகிடுவாய் தலைமுறையாய் தலைமுறையாய் தழைத்திட அருள் புரிவாய் --- விசுவாசியே 3. நெஞ்சமே நீ அஞ்சிடாதே தஞ்சம் இயேசு உன் அரணே தம் ஜனத்தை சீக்கிரமாய் தம்முடன் சேர்த்துக் கொள்வார் --- விசுவாசியே 4. மேகம் போன்ற வாக்குத்தத்தம் சூழ நின்றே காத்திருக்க விசுவாசத்தால் உரிமை கொள்வாய் விரைந்து முன் ஏகிடுவாய் --- விசுவாசியே

அனைத்து சமயத்து மெய்ப்பொருள்

அனைத்து சமயத்து மெய்ப்பொருள் இயேசுவே வேதங்கள் கூறிடும் கருப்பொருள் இயேசுவே மெய்ப்பொருள் இயேசுவே... உண்மை என்பது ஒன்றே ஒன்றாகும் அண்மையில் சேர்ந்திட்டால் அதுவும...

உம்மைப் போல் யாருண்டு - 361

உம்மைப் போல் யாருண்டு எந்தன் இயேசு நாதா இந்தப் பார்தலத்தில் உம்மைப் போல் யாருண்டு பாவப்பிடியினில் சிக்கி நான் உழன்றேன் தேவா தம் அன்பினால் மன்னித்தீர் --- உம்மைப் 1. ...