Skip to main content

என்ன என் ஆனந்தம்! என்ன என் ஆனந்தம்!

என்ன என் ஆனந்தம்! என்ன என் ஆனந்தம்! 
இயம்பலாகாதே 
மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம் 
மன்னித்து விட்டாரே 

1. கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் நன்றாய் 
மகிழ் கொண்டாடுவோம்! 
நாடியே நம்மைத் தேடியே வந்த 
நாதனைப் போற்றிடுவோம் 

2. பாவங்கள், சாபங்கள், கோபங்கள் எல்லாம் 
பரிகரித்தாரே 
தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து 
தேற்றியே விட்டாரே 

3. அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு 
அருளினதாலே 
நிச்சயம் சுவாமி பற்றியே சாட்சி 
பகரவேண்டியதே 

4. வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல்வீட்டில் 
ஜெயக்கொடியுடனே 
மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற 
மன்னனைத் ஸ்தோத்தரிப்போம் 

Comments

Popular posts from this blog

விசுவாசியே நீ பதறாதே - 234

கர்த்தரின் கை குறுகவில்லை 1. கர்த்தரின் கை குறுகவில்லை கர்த்தரின் வாக்கு மாறிடாதே சுத்தர்களாய் மாறிடவே சுதன் அருள் புரிந்தனரே பல்லவி விசுவாசியே நீ பதறாதே விசுவாசியே நீ கலங்காதே விசுவாசத்தால் நீதிமான் இன்றும் என்றும் பிழைப்பான் 2. திருச்சபையே நீ கிரியை செய்வாய் திவ்விய அன்பில் பெருகிடுவாய் தலைமுறையாய் தலைமுறையாய் தழைத்திட அருள் புரிவாய் --- விசுவாசியே 3. நெஞ்சமே நீ அஞ்சிடாதே தஞ்சம் இயேசு உன் அரணே தம் ஜனத்தை சீக்கிரமாய் தம்முடன் சேர்த்துக் கொள்வார் --- விசுவாசியே 4. மேகம் போன்ற வாக்குத்தத்தம் சூழ நின்றே காத்திருக்க விசுவாசத்தால் உரிமை கொள்வாய் விரைந்து முன் ஏகிடுவாய் --- விசுவாசியே

அனைத்து சமயத்து மெய்ப்பொருள்

அனைத்து சமயத்து மெய்ப்பொருள் இயேசுவே வேதங்கள் கூறிடும் கருப்பொருள் இயேசுவே மெய்ப்பொருள் இயேசுவே... உண்மை என்பது ஒன்றே ஒன்றாகும் அண்மையில் சேர்ந்திட்டால் அதுவும...

உம்மைப் போல் யாருண்டு - 361

உம்மைப் போல் யாருண்டு எந்தன் இயேசு நாதா இந்தப் பார்தலத்தில் உம்மைப் போல் யாருண்டு பாவப்பிடியினில் சிக்கி நான் உழன்றேன் தேவா தம் அன்பினால் மன்னித்தீர் --- உம்மைப் 1. ...