Skip to main content

உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்

உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் 
உங்கள் கவலைகள் கண்ணீர் 
எல்லாம் மறைந்து விடும் 

கலங்காதே மகனே, கலங்காதே மகளே 
என் இயேசு கைவிட மாட்டார் 

1. கடந்ததை நினைத்து கலங்காதே 
நடந்ததை மறந்துவிடு 
கர்த்தர் புதியன செய்திடுவார் 
இன்றே நீ காண்பாய்... கலங்கிடவே வேண்டாம் 

2. நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார் 
உடைந்த உள்ளம் தாங்குகிறார் 
காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார் 
கண்ணீர் துடைகின்றார் - (உன்) 

3. திராணிக்கு மேலாக சோதிக்கப்பட 
ஒருநாளும் விட மாட்டார் 
தாங்கிடும் பெலன் தருவார் 
தப்பி செல்ல வழி செய்வார் - (நீ) 

4. நல்லதோர் போராட்டம் போராடுவோம் 
விசுவாசம் காத்துக் கொள்வோம் 
நீதியின் கிரீடம் நமக்கு உண்டு 
நேசர் வருகையில் தந்திடுவார் - நம் 

5. மாலையில் மகனே அழுகின்றாயா 
காலையில் அக மகிழ்வாய் 
நித்திய பேரானந்தம் 
நேசரின் சமூகத்திலே 

6. அக்கினியின் மேல் நடந்தாலும் 
எரிந்து போக மாட்டாய் 
ஆறுகளை நீ கடந்தாலும் 
மூழ்கி போக மாட்டாய் 

7. முழுமையாய் மனம் திரும்பிவிடு 
முற்றிலும் வாழ்வை ஒப்புக்கொடு 
வேண்டாத அனைத்தையும் விட்டுவிடு 
ஆண்டவர் விருப்பம் நிறைவேற்று 
எங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் 

எங்கள் கவலைகள் கண்ணீர் 
எல்லாம் மறைந்துவிடும் 
கலங்கிடவே மாட்டோம் 
நாங்கள் கலங்கிடவே மாட்டோம்

Comments

Popular posts from this blog

விசுவாசியே நீ பதறாதே - 234

கர்த்தரின் கை குறுகவில்லை 1. கர்த்தரின் கை குறுகவில்லை கர்த்தரின் வாக்கு மாறிடாதே சுத்தர்களாய் மாறிடவே சுதன் அருள் புரிந்தனரே பல்லவி விசுவாசியே நீ பதறாதே விசுவாசியே நீ கலங்காதே விசுவாசத்தால் நீதிமான் இன்றும் என்றும் பிழைப்பான் 2. திருச்சபையே நீ கிரியை செய்வாய் திவ்விய அன்பில் பெருகிடுவாய் தலைமுறையாய் தலைமுறையாய் தழைத்திட அருள் புரிவாய் --- விசுவாசியே 3. நெஞ்சமே நீ அஞ்சிடாதே தஞ்சம் இயேசு உன் அரணே தம் ஜனத்தை சீக்கிரமாய் தம்முடன் சேர்த்துக் கொள்வார் --- விசுவாசியே 4. மேகம் போன்ற வாக்குத்தத்தம் சூழ நின்றே காத்திருக்க விசுவாசத்தால் உரிமை கொள்வாய் விரைந்து முன் ஏகிடுவாய் --- விசுவாசியே

அனைத்து சமயத்து மெய்ப்பொருள்

அனைத்து சமயத்து மெய்ப்பொருள் இயேசுவே வேதங்கள் கூறிடும் கருப்பொருள் இயேசுவே மெய்ப்பொருள் இயேசுவே... உண்மை என்பது ஒன்றே ஒன்றாகும் அண்மையில் சேர்ந்திட்டால் அதுவும...

எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம்

எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் - தேவா என்றென்றும் நான் பாடுவேன் இந்நாள் வரை என் வாழ்விலே நீர் செய்த நன்மைக்கே 1. பூமியில் வாழ்கின்ற யாவும் அதின் மேல் உள்ள ஆகாயமும் வான்தூதர் சேனைகள் யாவும் தேவா உம்மைப் போற்றுதே 2. சூரிய சந்திரரோடே சகல நட்சத்திர கூட்டமும் ஆகாயப் பறவைகள் யாவும் தேவா உம்மைப் போற்றுதே 3. காட்டினில் வாழ்கின்ற யாவும் கடும் காற்றும் பனித் தூறலும் நாட்டினில் வாழ்கின்ற யாவும் நாதா உம்மைப் போற்றுதே 4. பாவ மனுக்குலம் யாவும் தேவா உம் அன்பினை உணர்ந்தே சிலுவையின் தியாகத்தைக் கண்டு ஒயா துதி பாடுதே