Skip to main content

இரத்தக்கோட்டைக்குள்ளே நான் நுழைந்துவிட்டேன் - 172

இரத்தக்கோட்டைக்குள்ளே நான் நுழைந்துவிட்டேன் 
இனி எதுவும் அணுகாது எந்தத் தீங்கும் தீண்டாது 

1. நேசரின் இரத்தம் என்மேலே 
நெருங்காது சாத்தான் 
பாசமாய்ச் சிலுவையில் பலியானார் 
பாவத்தை வென்று விட்டார் 

2. இம்மட்டும் உதவின எபனேசரே 
இனியும் காத்திடுவார் 
உலகிலே இருக்கும் அவனைவிட 
என் தேவன் பெரியவரே 

3. மலைகள் குன்றுகள் விலகினாலும் 
மாறாது உம் கிருபை 
அனாதி சிநேகத்தால் இழுத்துக்கொண்டீர் 
அணைத்த சேர்த்துக் கொண்டார் 

4. தாய் தன் பிள்ளையை மறந்தாலும் 
மறவாத என் நேசரே 
ஆயனைப்போல நடத்துகிறார் 
அபிஷேகம் செய்கின்றார் 

5. தேவனே ஒளியும் மீட்புமானார் 
யாருக்கு அஞ்சிடுவேன் 
அவரே என் வாழ்வின் பெலனானார் 
யாருக்கு பயப்படுவேன்? 

Comments

Popular posts from this blog

விசுவாசியே நீ பதறாதே - 234

கர்த்தரின் கை குறுகவில்லை 1. கர்த்தரின் கை குறுகவில்லை கர்த்தரின் வாக்கு மாறிடாதே சுத்தர்களாய் மாறிடவே சுதன் அருள் புரிந்தனரே பல்லவி விசுவாசியே நீ பதறாதே விசுவாசியே நீ கலங்காதே விசுவாசத்தால் நீதிமான் இன்றும் என்றும் பிழைப்பான் 2. திருச்சபையே நீ கிரியை செய்வாய் திவ்விய அன்பில் பெருகிடுவாய் தலைமுறையாய் தலைமுறையாய் தழைத்திட அருள் புரிவாய் --- விசுவாசியே 3. நெஞ்சமே நீ அஞ்சிடாதே தஞ்சம் இயேசு உன் அரணே தம் ஜனத்தை சீக்கிரமாய் தம்முடன் சேர்த்துக் கொள்வார் --- விசுவாசியே 4. மேகம் போன்ற வாக்குத்தத்தம் சூழ நின்றே காத்திருக்க விசுவாசத்தால் உரிமை கொள்வாய் விரைந்து முன் ஏகிடுவாய் --- விசுவாசியே

அனைத்து சமயத்து மெய்ப்பொருள்

அனைத்து சமயத்து மெய்ப்பொருள் இயேசுவே வேதங்கள் கூறிடும் கருப்பொருள் இயேசுவே மெய்ப்பொருள் இயேசுவே... உண்மை என்பது ஒன்றே ஒன்றாகும் அண்மையில் சேர்ந்திட்டால் அதுவும...

உம்மைப் போல் யாருண்டு - 361

உம்மைப் போல் யாருண்டு எந்தன் இயேசு நாதா இந்தப் பார்தலத்தில் உம்மைப் போல் யாருண்டு பாவப்பிடியினில் சிக்கி நான் உழன்றேன் தேவா தம் அன்பினால் மன்னித்தீர் --- உம்மைப் 1. ...