Skip to main content

Posts

Showing posts from October, 2020

எந்தன் உள்ளம் புது கவியாலே

எந்தன் உள்ளம் புது கவியாலே பொங்க இயேசுவை பாடிடுவேன் அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம் அவரையே நேசிக்கிறேன் அல்லேலூயா துதி அல்லேலூயா - எந்தன் அண்ணலாம் இயேசுவை பாடிடுவேன் இத்தனை கிருபைகள் நித்தமும் அருளிய கர்த்தரைக் கொண்டாடுவேன் சென்ற காலம் முழுவதும் காத்தாரே ஓர் சேதமும் அணுகாமல் சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக் கின்றும் சுக பெலன் அளித்தாரே - அல்லேலூயா சில வேலை இமைப்பொழுதே தம் முகத்தை சிருஷ்டிகர் மறைத்தாரே கடுங்கோபம் நீக்கி திரும்பவும் என்மேல் கிருபையும் பொழிந்தாரே - அல்லேலூயா பஞ்ச காலம் பெருகிட நேர்ந்தாலும் தாம் தஞ்சமே ஆனாரே அங்கும் இங்கும் நோய்கள் பரவி வந்தாலும் அடைக்கலம் அளித்தாரே - அல்லேலூயா களிப்போடு விரைந்தேம்மை சேர்த்திட என் கர்த்தரே வருவாரே ஆவலோடு நாமும் வானத்தை நோக்கி அனுதினமும் காத்திருப்போம் - அல்லேலூயா

கர்த்தர் நாமம் என் புகலிடமே

கர்த்தர் நாமம் என் புகலிடமே கருத்தோடு துதித்திடுவேன்   1.   யேகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர் கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா  -கர்த்தர்   2.   யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர் ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே     -கர்த்தர்   3.   யேகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வமே கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா  -கர்த்தர்   4.   யேகோவா ரூவா எங்கள் நல்ல மேய்ப்பரே ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே     -கர்த்தர்   5.   யேகோவா ஷாம்மா கூடவே இருக்கிறீர் கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா  -கர்த்தர்   6.   யேகோவா ஷாலோம் சமாதானம் தருகின்றீர் ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே     -கர்த்தர்

அன்பே கல்வாரி அன்பே

அன்பே கல்வாரி அன்பே உம்மைப் பார்க்கையிலே என் உள்ளம் உடையுதப்பா தாகம் தாகம் என்றீர் எனக்காய் ஏங்கி நின்றீர் பாவங்கள் சுமந்தீர் எங்கள் பரிகார பலியானீர் காயங்கள் பார்க்கின்றேன் கண்ணீர் வடிக்கின்றேன் தூய திரு இரத்தமே துடிக்கும் தாயுள்ளமே அணைக்கும் கரங்களிலே ஆணிகளா சுவாமி? நினைத்துப் பார்க்கையிலே நெஞ்சம் உருகுதையா நெஞ்சில் ஓர் ஊற்று நதியாய் பாயுதையா மனிதர்கள் மூழ்கணுமே மறுரூபம் ஆகணுமே