Skip to main content

Posts

Showing posts from September, 2020

தூயாதி தூயவரே உமது புகழை - 61

தூயாதி தூயவரே உமது புகழை, நான் பாடுவேன் பாரில் எனக்கு வேறென்ன வேண்டும் உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் - தூயாதி 1. சீடரின் கால்களைக் கழுவினவர் செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே! 2. பாரோரின் நோய்களை நீக்கினவர் பாவி என் பாவ நோய் நீக்கினீரே! 3. துயரங்கள் பாரினில் அடைந்தவரே துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே! 4. பரலோகில் இடமுண்டு என்றவரே பரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே

நன்றி சொல்லுகிறோம் நாதா

நன்றி சொல்லுகிறோம் நாதா நாவாலே துதிக்கிறோம் நாதா நன்றி இயேசு ராஜா (2) 1. கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜா புதிய நாளை தந்திரே நன்றி ராஜா 2. ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜா அதிசயம் செய்தீரே நன்றி ராஜா 3. வாழ்க்கையிலே ஒளிவிளக்காய் வந்தீரையா வார்த்தை என்ற மன்னாவை தந்தீரையா 4. அடைக்கலமே கேடயமே நன்றி ராஜா அன்பே என் ஆறுதலே நன்றி ராஜா 5. தனிமையிலே துணை நின்றீர் நன்றிராஜா தாயைப் போல் தேற்றினீர் நன்றிராஜா 6. சோர்ந்துபோன நேரமெல்லாம் தூக்கினீரே சுகம் தந்து இதுவரை தாங்கினீரே 7. புதுவாழ்வு தந்தீரே நன்றி ராஜா புதுபெலன் தந்தீரே நன்றி ராஜா 8. ஊழியம் தந்தீரே நன்றி ராஜா உடனிருந்து நடத்தினீரே நன்றி ராஜா

வல்லமை தாரும் தேவா - 251

வல்லமை தாரும் தேவா இன்றே தேவை தேவா இப்போ தாரும் தேவா பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமை ஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை 1. மாம்சமான யாவர் மேலும் ஆவியை ஊற்றுவேன் என்றீர் மூப்பர் வாலிபர் யாவரும் தீர்க்க தரிசனம் சொல்வாரே – பொழிந்திடும் 2. பெந்தேகோஸ்தே நாளின் போல பெரிதான முழக்கத்தோடே வல்லமையாக இறங்கி வரங்களினாலே நிரப்பும் – பொழிந்திடும் 3. மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையான ஆவியைத்தாரும் பிதாவே என்று அழைக்க புத்ர சுவிகாரம் ஈந்திடும் – பொழிந்திடும்

மனதுருகும் தெய்வமே இயேசையா - 377

மனதுருகும் தெய்வமே இயேசையா மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் நீர் நல்லவர் சர்வ வல்லவர் உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை உம் அன்பிற்கு அளவே இல்லை அவை காலைதோறும் புதிதாயிருக்கும் 1. மெய்யாக எங்களது பாடுகளை ஏற்றுக் கொண்டு துக்கங்களை சுமந்து கொண்டீர் – ஐயா 2. எங்களுக்கு சமாதானம் உண்டுபண்ணும் தண்டனையோ உம்மேலே விழுந்ததையா – ஐயா 3. சாபமான முள்முடியை தலைமேலே சுமந்து கொண்டு சிலுவையிலே வெற்றி சிறந்தீர் – ஐயா 4. எங்களது மீறுதலால் காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர் தழும்புகளால் சுகமானோம் – உந்தன் 5. தேடிவந்த மனிதர்களின் தேவைகளை அறிந்தவராய் தினம் தினம் அற்புதம் செய்தீர் – ஐயா

இயேசு ரட்சகர் பெயரைச்

இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால் எதுவும் நடக்குமே அவர் இதயத்தோடு கலந்து விட்டால் எல்லாம் கிடைக்குமே (2) 1. வாடி கிடந்த உயிர்களெல்லாம் வாழ வைத்தாரே அவர் வாழ்வும் சத்தியம் ஜீவனுமாய் நன்மை செய்தாரே பரம பிதா ஒருவன் என்று வகுத்து சொன்னவர் இயேசு பாசம் அன்பு கருணையோடு உலகை கண்டவர் இயேசு 2. எதையும் தாங்கும் சகிப்புத் தன்மை வேண்டும் என்றவர் இயேசு நம் எல்லோருக்கும் இறைவனாக விளங்குகின்றவர் இயேசு தீமை வளரும் எண்ணம் தன்னை அகற்ற சொன்னவர் இயேசு தூய்மை நிறைந்த உள்ளத்தோடு பழகச் சொன்னவர் இயேசு

இடைவிடா நன்றி உமக்குத்தானே - 577

இடைவிடா நன்றி உமக்குத்தானே இணையில்லா தேவன் உமக்குத்தானே – (2) 1. என்ன நடந்தாலும் நன்றி ஐயா யார் கைவிட்டாலும் நன்றி ஐயா – (2) நன்றி நன்றி --- இடைவிடா 2. தேடி வந்தீரே நன்றி ஐயா தெரிந்துக் கொண்டீரே நன்றி ஐயா – (2) நன்றி நன்றி --- இடைவிடா 3. நிம்மதி தந்தீரே நன்றி ஐயா நிரந்தரம் ஆனீரே நன்றி ஐயா – (2) நன்றி நன்றி --- இடைவிடா 4. என்னைக் கண்டீரே நன்றி ஐயா கண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா – (2) நன்றி நன்றி --- இடைவிடா 5. நீதி தேவனே நன்றி ஐயா வெற்றி வேந்தனே நன்றி ஐயா – (2) நன்றி நன்றி --- இடைவிடா 6. அநாதி தேவனே நன்றி ஐயா அரசாளும் தெய்வமே நன்றி ஐயா - (2) நன்றி நன்றி --- இடைவிடா 7. நித்திய இராஜாவே நன்றி ஐயா சத்திய தீபமே நன்றி ஐயா - (2) நன்றி நன்றி --- இடைவிடா