Skip to main content

Posts

Showing posts from July, 2020

கர்த்தாவே தேவர்களில்

கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார் வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் (2) உமக்கொப்பானவர் யார் உமக்கொப்பானவர் யார் வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் 1. செங்கடலை நீர் பிளந்து உந்தன் ஜனங்களை நடத்திச் சென்றீர் (2) நீர் நல்லவர் சர்வ வல்லவர் என்றும் வாக்கு மாறாதவர் (2) 2. தூதர்கள் உண்ணும் உணவால் உந்தன் ஜனங்களை போஷித்தீரே (2) உம்மைப் போல யாருண்டு இந்த ஜனங்களை நேசித்திட (2) 3. கன்மலையை நீர் பிளந்து உந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர் (2) உம் நாமம் அதிசயம் இன்றும் அற்புதம் செய்திடுவீர் (2)

தேவா நான் எதினால் விசேஷித்தவன் - 26

தேவா நான் எதினால் விசேஷித்தவன் ராஜா நான் அதை தினம் யோசிப்பவன் எதினால் இது எதினால் நீர் என்னோடு வருவதினால் எதினால் இது எதினால் நீர் என்னோடு இருப்பதினால் 1. மேகஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது பாதை காட்ட பகலெல்லாம் கூட செல்லுது அன்பான தேவன் என்னோடு வருவார் அது போதும் என் வாழ்விலே --- தேவா 2. தாகம் கொண்ட தேவ ஜனம் வானம் பார்க்குது ஆவல் கொண்ட கன்மலையும் கூட செல்லுது என் ஏக்கம் எல்லாம் என் தேவன் தீர்ப்பார் சந்தோஷம் நான் காணுவேன் --- தேவா 3. வாழ்க்கையில் கசப்புகள் கலந்திட்டாலும் பாசமுள்ள ஒருமரம் கூடவருது மாராவின் நீரை தேனாக மாற்றும் என் நேசர் என்னோடுண்டு --- தேவா