Skip to main content

Posts

Showing posts from March, 2020

உந்தன் நாமம் மகிமை பெற

உந்தன் நாமம் மகிமை பெற வேண்டும் கர்த்தாவே உந்தன் அரசு விரைவில் வரவேண்டும் கர்த்தாவே – ஜெபிக்கிறோம் நாங்கள் துதிக்கிறோம் 1. இந்தியா இரட்சகரை அறிய வேண்டுமே இருளில் உள்ளோர் வெளிச்சத்தையே காண வேண்டுமே 2. சாத்தான் கோட்டை தகர்ந்து விழ வேண்டுமே சாபம் நீங்கி சமாதானம் வரணுமே 3. கண்ணீர் சிந்தி கதறி நாங்கள் அழுகிறோம் கரம்விரித்து உம்மை நோக்கி பார்க்கிறோம் 4. சிலுவை இரத்தம் தெளிக்கப்பட வேண்டுமே ஜீவநதி பெருகியோட வேண்டுமே 5. ஜெபசேனை எங்கும் எழும்ப வேண்டுமே உபவாச கூட்டம் பெருக வேண்டுமே

உம்மை அப்பானு கூப்பிடத்தான் ஆசை

உம்மை அப்பானு கூப்பிடத்தான் ஆசை அப்பானு கூப்பிடவா உம்மை அம்மானு கூப்பிடவும் ஆசை அம்மானும் கூப்பிடவா (2) உம்மை அப்பானு கூப்பிடவா உம்மை அம்மானும் கூப்பிடவா 1. கருவில் என்னை காத்தத பார்த்தா அம்மானு சொல்லனும் உம் தோளில் என்னை சுமப்பதை பார்த்தா அப்பானு சொல்லனும் என்னை கெஞ்சுவதும் கொஞ்சுவதும் பார்த்தா அம்மானு சொல்லனும் என்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தா அப்பானு சொல்லனும் – உம்மை அப்பானு கூப்பிடவா… 2. என் கண்ணீரை துடைப்பதை பார்த்தா அம்மானு சொல்லனும் என் விண்ணப்பத்தை கேட்பதை பார்த்தா அப்பானு சொல்லனும் என்னை ஏந்துவதும் தாங்குவதும் பார்த்தா அம்மானு சொல்லனும் உம் இரக்கத்தை உருக்கத்தை பார்த்தா அப்பானு சொல்லனும் – உம்மை அப்பானு கூப்பிடவா…

திருக்கரத்தால் தாங்கி என்னை

திருக்கரத்தால் தாங்கி என்னை திருச்சித்தம் போல் நடத்திடுமே குயவன் கையில் களிமண் நான் அனுதினமும் வனைந்திடுமே . 1. உம் வசனம் தியானிக்கையில் இதயமதில் ஆறுதலே காரிருளில் நடக்கையிலே தீபமாக வழி நடத்தும் 2. ஆழ்கடலில் அலைகளினால் அசையும்போது என் படகில் ஆத்ம நண்பர் இயேசு உண்டே சேர்ந்திடுவேன் அவர் சமூகம் 3. அவர் நமக்காய் ஜீவன் தந்து அளித்தனரே பெரிய மீட்பு கண்களினால் காண்கிறேனே இன்பக் கானான் தேசமதை

உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு

உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு (2) என் யேசையா அல்லேலுயா என் யேசையா அல்லேலுயா -2 இன்பத்திலும் நீரே துன்பத்திலும் நீரே (2) எவ்வேளையும் ஐயா நீர்தானே – 2 என் சிநேகமும் நீரே என் ஆசையும் நீரே (2) என் எல்லாமே ஐயா நீர்தானே – 2 இம்மையிலும் நீரே மறுமையிலும் நீரே (2) எந்நாளுமே ஐயா நீர்தானே-2

உம்மோடு இருக்கணுமே ஐயா

உம்மோடு இருக்கணுமே ஐயா உம்மைப் போல் மாறணுமே உலகின் ஒளியாய் மலைமேல் அமர்ந்து வெளிச்சம் கொடுக்கணுமே 1. ஓடும் நதியின் ஓரம் வளரும் மரமாய் மாறணுமே எல்லா நாளும் இலைகளோடு கனிகள் கொடுக்கணுமே 2. உலகப் பெருமை இன்பமெல்லாம் குப்பையாய் மாறணுமே உம்மையே என் கண்முன் வைத்து ஓடி ஜெயிக்கணுமே 3. ஆத்ம பார உருக்கத்தோடு அழுது புலம்பணுமே இரவும் பகலும் விழித்து ஜெபிக்கும் மேய்ப்பன் ஆகணுமே – நான் 4. பேய்கள் ஓட்டும் வல்லமையோடு பிரசங்கள் பண்ணணுமே கடினமான பாறை இதயம் உடைத்து நொறுக்கணுமே – நான் 5. வார்த்தை என்னும் வாளையேந்தி யுத்தம் செய்யணுமே விசுவாசம் என்னும் கேடயத்தால் பிசாசை வெல்லணுமே – நான்

பரிசுத்தர் கூட்டம் நடுவில்

பரிசுத்தர் கூட்டம் நடுவில் ஜொலித்திடும் சுத்த ஜோதியே அரூபியே இவ்வேளையில் அடியார் நெஞ்சம் வாரீரோ 1. மீன் கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோ? கல் தின்னக் கொடுக்கும் பெற்றோர் உண்டோ? பொல்லாதோர் கூட செய்திடார் நற்பிதா நலம் அருள்வார் 2. சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியே விரும்பா அசுத்தம் யாவும் போக்குமே பாவி நீசப்பாவி நானையா தேவா இரக்கம் செய்ய மாட்டீரோ? 3.பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை யாரும் காணா உள்ளலங்கோலத்தை மனம் நொந்து மருளுகின்றேன் பரிசுத்தம் கெஞ்சுகின்றேன் 4.துணை வேண்டும் தகப்பனே உலகிலே என்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டே என் ஜீவன் எல்லையெங்கிலும் பரிசுத்தம் என எழுதும்