Skip to main content

Posts

Showing posts from February, 2020

என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்

என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர் என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன் என் உயிரான உயிரான உயிரான இயேசு 1. உலகமெல்லாம் மறக்குதையா உணர்வு எல்லாம் இனிக்குதையா உம் நாமம் துதிக்கையிலே இயேசையா உம் அன்பை ருசிக்கையிலே 2. உம் வசனம் எனக்கு உணவாகும் உடலுக்கெல்லாம் மருந்தாகும் இரவும் பகலுமையா உந்தன் வசனம் தியானிக்கிறேன் 3. உம் திரு நாமம் உலகத்திலே உயர்ந்த அடைக்கல அரண்தானே நீதிமான் உமக்குள்ளே ஓடி சுகமாய் இருப்பானே

கிருபையால், நிலை நிற்கின்றோம்

கிருபையால், நிலை நிற்கின்றோம் உம் கிருபையால், நிலை நிற்கின்றோம் கிருபை - (7) --- கிருபையால் 1. பெயர் சொல்லி அழைத்தது, உங்க கிருபை பெரியவனாக்கியதும், உங்க கிருபை கிருபை - (7) --- கிருபையால் 2. நீதிமானாய் மாற்றியது, உங்க கிருபை நித்தியத்தில் சேர்ப்பது, உங்க கிருபை கிருபை - (7) --- கிருபையால் 3. கட்டுகளை நீக்கினது, உங்க கிருபை காயங்களை கட்டியதும், உங்க கிருபை கிருபை - (7) --- கிருபையால் 4. வல்லமையை அளித்தது, உங்க கிருபை வரங்களை கொடுத்தது, உங்க கிருபை கிருபை - (7) --- கிருபையால் 5. கிருபையை, கொண்டாடுகிறோம் தேவ கிருபையை, கொண்டாடுகிறோம் கிருபை - (7) --- கிருபையால்

ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே

ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே எங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே உம் வார்த்தையிலே சுகம் உம் வார்த்தையிலே மதுரம் உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம் 1.மாராவின் தண்ணீரெல்லாம் மதுரமாக மாறிப்போகும் கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும் ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - நீர் 2.இருளான வாழ்க்கை எல்லாம் ஒளியாக மாறிப்போகும் கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும் ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - நீர் 3.எரிகோவின் தடைகள் எல்லாம் துதிகளாலே மாறிப்போகும் கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும் ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - நீர் 4.வியாதிகள் வறுமையெல்லாம் விசுவாசத்தால் மாறிப்போகும் கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும் ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - நீர்

நன்றி பலி பீடம் கட்டுவோம்

நன்றி பலி பீடம் கட்டுவோம் நல்ல தெய்வம் நன்மை செய்தார் செய்த நன்மை ஆயிரங்கள் சொல்லிச் சொல்லி பாடுவேன் நன்றி தகப்பனே நன்மை செய்தீரே ஜீவன் தந்து நீர் அன்புகூர்ந்தீர் பாவம் நீங்கிட கழுவி விட்டீர் உமக்கென்று வாழ பிரித்தெடுத்து உமது ஊழியம் செய்ய வைத்தீர் இருளின் அதிகாரம் அகற்றிவிட்டீர் இயேசு அரசுக்குள் சேர்த்துவிட்டீர் உமக்கு சொந்தமாய் வாங்கிக் கொண்டு உரிமைச் சொத்தாக வைத்துக் கொண்டீர் பார்க்கும் கண்களை தந்தீரய்யா பாடும் உதடுகள் தந்தீரய்யா உழைக்கும் கரங்களை தந்தீரய்யா ஓடும் கால்களைத் தந்தீரய்யா நல்ல குடும்பம் நீர் தந்தீரய்யா செல்ல பிள்ளைகள் தந்தீரய்யா அணைக்கும் கணவனை தந்தீரய்யா அன்பு மனைவியை தந்தீரய்யா இருக்க நல்ல ஒரு வீடு தந்தீர் வாழத் தேவையான வசதி தந்தீர் கடுமையாக தினம் உழைக்க வைத்தீர் கடனே இல்லாமல் வாழ வைத்தீர் புதிய உடன்பாட்டின் அடையாளமாய் புனித இரத்தம் ஊற்றினீரே சத்திய ஜீவ வார்த்தையாலே மரித்த வாழ்வையே மாற்றினீரே எதிராய் வாழ்ந்து வந்த இவ்வுலகை ஒப்புரவாக்கினீர் உம் இரத்தத்தால் தூரம் வாழ்ந்து வந்த எங்களையே அருகில் கொண்டுவந்தீர் ஆவியினால் குற்றம் செய்ததால் மரித்திருந்தோம் இயேசுவோடே...