Skip to main content

Posts

Showing posts from November, 2019

இஸ்ரவேல் என் ஜனமே - 233

இஸ்ரவேல் என் ஜனமே என்றும் இடறிட வேண்டாம் யேகோவா உன் தெய்வமானால் ஏதும் பயம் வேண்டாம் 1. ஓங்கும் புயமும் பலத்த கரமும் உன் பக்கமே யுண்டு தாங்கும் கிருபை தயவு இரக்கம் தாராளமாயுண்டு – இஸ்ரவேல் 2. பார்வோன் கைக்கு விடுத்து மீட்ட பஸ்கா ஆட்டுக்குட்டி ஆரோன் மோசே என்னும் நல்ல ஆசாரியர் உண்டு – இஸ்ரவேல் 3. செங்கடலில் வழி திறந்த சீயோன் நாயகனே பங்கமின்றி பாலைவனத்தில் பராமரித்தாரே – இஸ்ரவேல் 4. சத்துருக்களை சிதற அடித்த சர்வ வல்ல தேவன் யுத்தத்தில் உன் முன்னே சென்று ஜெயமெடுத்தாரே – இஸ்ரவேல் 5. பயப்படாதே சிறு மந்தையே பார் நான் உன் மேய்ப்பன் தயங்காதே மனம் கலங்காதே உன் தேவன் தினம் காப்பேன் – இஸ்ரவேல்

நீரின்றி வாழ்வேது இறைவா- 974

நீரின்றி வாழ்வேது இறைவா உம் நினைவின்றி மகிழ்வேது தேவா உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்த போதும் உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே போதும் பல கோடி வார்த்தைகள் நான் கேட்ட போதும் இயேசுவே நீர் பேசும் ஒரு வார்த்தை போதும் ஒராயிரம் ஜீவன் உயிர் வாழுமே உம் வார்த்தையில் உண்டு அற்புதமே கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர் அதற்குள்ளும் ஜீவனை தந்தவர் நீர் உமையன்றி அனு வேதும் அசையாதையா உம் துணையின்றி உயிர் வாழ முடியாதைய்யா எத்தனை நன்மைகள் செய்தீரையா அதில் எதற்கென்று நன்றி சொல்லி துதிப்பேன் ஐயா அத்தனையும் சொல்ல வேண்டும் என்றால் ஆயிரம் ஆண்டுகள் போதாதையா

இயேசு கூட வருவார் - 986

இயேசு கூட வருவார் எல்லாவித அற்புதம் செய்வார் தந்தான தந்தனத்தானானா – 2 1. நோய்கள் பேய்கள் ஓட்டிடுவார் நொந்துபோன உள்ளத்தை தேற்றிடுவார் 2. வேதனை துன்பம் நீக்கிடுவார் சமாதானம் சந்தோஷம் எனக்குத் தருவார் 3. கடன்தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார் கண்ணீர்கள் அனைத்தையும் துடைத்திடுவார் 4. எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவேன் எதிரியான சாத்தானை முறியடிப்பேன்

அனாதி தேவன் உன் - 472

அனாதி தேவன் உன் அடைக்கலமே அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே இந்த தேவன் என்றென்றுமுள்ள சதா காலமும் நமது தேவன் மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார் 1. காருண்யத்தாலே இழுத்துக் கொண்டார் தூய தேவ அன்பே இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை இனிதாய் வருந்தி அழைத்தார் --- இந்த 2. கானகப் பாதை காரிருளில் தூய தேவ ஒளியே அழுகை நிறைந்த பள்ளத் தாக்குகளை அரும் நீரூற்றாய் மாற்றினாரே --- இந்த 3. கிருபை கூர்ந்து மன துருகும் தூய தேவ அன்பே உன் சமாதானத்தின் உடன்படிக்கைகளை உண்மையாய் கர்த்தர் காத்துக்கொள்வார் --- இந்த 4. இப்புவி யாத்திரை கடந்திடுவாய் தூய தேவ தயவால் கடும் கானகத்தில் கர்த்தர் மார்பினிலே கிடைக்கும் இளைப்பாறுதலே --- இந்த 5. வறண்ட வாழ்க்கை செழித்திடுமே தூய தேவ அருளால் நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும் சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம் --- இந்த 6. ஆனந்தம் பாடித் திரும்பியே வா தூய தேவ பெலத்தால் சீயோன் பர்வதம் உன்னைச் சேர்த்திடுவார் சந்ததம் மகிழ்ச்சி அடைவாய் --- இந்த