Skip to main content

Posts

Showing posts from July, 2019

ஆவியானவரே அன்பின் - 256

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே இப்போ வாரும் இறங்கி வாரும் எங்கள் மத்தியிலே 1. உளையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரே பாவம் கழுவி தூய்மையாக்கும் இந்த வேளையிலே 2. பத்மு த...

இடைவிடா நன்றி உமக்குத்தானே

இடைவிடா நன்றி உமக்குத்தானே இணையில்லா தேவன் உமக்குத்தானே – (2) 1. என்ன நடந்தாலும் நன்றி ஐயா யார் கைவிட்டாலும் நன்றி ஐயா – (2) நன்றி நன்றி --- இடைவிடா 2. தேடி வந்தீரே நன்றி ஐயா தெ...

எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம்

எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் - தேவா என்றென்றும் நான் பாடுவேன் இந்நாள் வரை என் வாழ்விலே நீர் செய்த நன்மைக்கே 1. பூமியில் வாழ்கின்ற யாவும் அதின் மேல் உள்ள ஆகாயமும் வான்தூதர் சேனைகள் யாவும் தேவா உம்மைப் போற்றுதே 2. சூரிய சந்திரரோடே சகல நட்சத்திர கூட்டமும் ஆகாயப் பறவைகள் யாவும் தேவா உம்மைப் போற்றுதே 3. காட்டினில் வாழ்கின்ற யாவும் கடும் காற்றும் பனித் தூறலும் நாட்டினில் வாழ்கின்ற யாவும் நாதா உம்மைப் போற்றுதே 4. பாவ மனுக்குலம் யாவும் தேவா உம் அன்பினை உணர்ந்தே சிலுவையின் தியாகத்தைக் கண்டு ஒயா துதி பாடுதே

துதித்துப் பாடிட பாத்திரமே

1. துதித்துப் பாடிட பாத்திரமே துங்கவன் இயேசுவின் நாமமதே துதிகளின் மத்தியில் வாசஞ்செய்யும் தூயனை நேயமாய் ஸ்தோத்தரிப்போமே பல்லவி ஆ! அற்புதமே அவர் நடத்துதலே ஆனந்தமே பரமானந்தமே நன்றியால் உள்ளமே மிக பொங்கிடுதே நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம் 2. கடந்த நாட்களில் கண்மணிபோல் கருத்துடன் நம்மைக் காத்தாரே கர்த்தரையே நம்பி ஜீவித்திட கிருபையும் ஈந்ததாலே ஸ்தோத்தரிப்போமே --- ஆ! அற்புதமே 3. அக்கினி ஊடாய் நடந்தாலும் ஆழியில் தண்ணீரைக் கடந்தாலும் சோதனையோ மிகப் பெருகினாலும் ஜெயம் நமக்கீந்ததால் ஸ்தோத்தரிப்போமே --- ஆ!அற்புதமே 4. இந்த வனாந்திர யாத்திரையில் இன்பராம் இயேசு நம்மோடிருப்பார் போகையிலும் நம் வருகையிலும் புகலிடம் ஆனதால் ஸ்தோத்தரிப்போமே --- ஆ!அற்புதமே 5. வாஞ்சைகள் தீர்த்திட வந்திடுவார் வாரும் என்றே நாம் அழைத்திடுவோம் வானத்திலே ஒன்று சேர்ந்திடும் நாள் விரைந்து நெருங்கிட ஸ்தோத்தரிப்போமே --- ஆ!அற்புதமே

உதவி வரும் கன்மலை நோக்கிப் 

உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்கின்றேன் வானமும் வையமும் படைத்தவரை நான் பார்கின்றேன் (2) 1. கால்கள் தள்ளாட விடமாட்டார் காக்கும் தேவன் உறங்க மாட்டார் (2) இஸ்ரவேலை காக்கிறவர் என்னாளும் தூங்க மாட்டார் (2) – உதவி 2. கர்த்தர் என்னை காக்கின்றார் எனது நிழலாய் இருகின்றார் (2) பகலினிலும் இரவினிலும் பாது காக்கின்றார் (2) – உதவி 3. கர்த்தர் எல்லா தீங்கிற்கும் விலக்கி என்னைக் காத்திடுவார் (2) அவர் எனது ஆத்துமாவை அனுதினம் காத்திடுவார் (2) – உதவி 4. போகும் போதும் காக்கின்றார் திரும்பும் போதும் காக்கின்றார் (2) இப்போது எப்போது என்னாளும் காக்கின்றார் (2) – உதவி

அடைக்கலமே உமதடிமை நானே

அடைக்கலமே உமதடிமை நானே ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே நித்தம் நித்தம் நான் நினைப்பேனே அளவற்ற அன்பினால் அணைப்பவரே எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே மாசில்லாத நேசரே மகிமை பிரதாபா பாசத்தால் உம்பாதம் பற்றிடுவேனே கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளே சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே பக்தரின் பேரின்ப பாக்கியமிதே என்னை என்றும் போதித்து நடத்துபவரே கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே -நடக்கும் வழிதனை காட்டுபவரே நம்பி வந்தோனை கிருபை சூழ்ந்து கொள்ளுதே கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ கூப்பிட்ட என்னை குணமாக்கினீரல்லோ குழியில் விழாதபடி காத்துக் கொண்டீரே அழுகையை களிப்பாக மாற்றிவிட்டீரே பாவங்களை பாராதென்னை பற்றி கொண்டீரே சாபங்களை நீக்கி சுத்த உள்ளம் தந்தீரே இரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்ப தந்தீரே – உற்சாக ஆவி என்னை தாங்கச் செய்தீரே